கோவையில் வேட்பாளர்களே தெரியவில்லை.. அட்வான்ஸ் பிரச்சாரம்..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் பிரச்சார பணிகளை துவக்கியுள்ளனர். குறிப்பாக மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் இரவு நேர பிரச்சாரம், தெரு முனை பிரச்சாரம், சாதனை விளக்க பிரச்சாரம் போன்ற பல்வேறு வகை பிரச்சார நிகழ்வுகள் பரவலாக நடக்கிறது. வேட்டாளர்கள் யார், கூட்டணியில் யார் யார் என தெரியாத நிலையிலும் உத்தேசமாக சில கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படவில்லை. இந்த நேரத்தில் பிரச்சாரம் செய்ய நேரம்…

Read More

கோவை நெகமம் இரட்டை கொலை கைதான வாலிபர் பகிர் வாக்குமூலம்..

கொலை செய்யப்பட்ட சிறுமி கோவை நெகமம் அருகே உள்ள கொண்டே கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் பூபதி. இவரது மூத்த மகள் ஹரிதா(19). இரண்டாவது மகள் கௌசி (17). கௌசியை அந்த பகுதியை சேர்ந்த அபிஷேக் ( 24) என்பவர் காதலித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற அபிஷேக் இளம் பெண்ணின் பாட்டி மயிலாத்தாள் (65) என்பவரிடம் பேத்தியை திருமணம் செய்து தர வேண்டும்…

Read More

கோவையில் தொழிலாளி அடித்து கொலை: 3 பேர் கைது

பெரியநாயக்கன் பாளைய பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (40). கூலி தொழிலாளி. கடந்த 15 ம் தேதி பெட்டதாரதாபுரம் அண்ணா நகர் காட்டுப்பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன் மது குடித்துள்ளார். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தோணியை கைகளாலும் கட்டையாலும் தாக்கி உள்ளனர். அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினரிடம் செல்போனில் அழைத்து அந்தோணி மயக்கமடைந்து கிடப்பதாக…

Read More

கோவையில் அம்மா சிலையை மறைத்து அதிமுக நிர்வாகிகள் அசத்தல் போஸ்..!

கோவை ஓசூர் ரோடு இதய தெய்வம் அணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா இன்று நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், கே ஆர் ஜெயராம் , முன்னாள் அமைச்சர் செ ம வேலுச்சாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அவிநாசி ரோடு அண்ணா சிலை பகுதியில் உள்ள ஜெயலலிதா முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

Read More

வாக்காளர் பிரச்சனை தீர்க்க ஹெல்ப் டெஸ்க் 1950..

தமிழக அளவில் வாக்காளர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஹெல்ப் டெஸ்க் என்ற வாக்காளர்கள் உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் நேற்று துவக்கப்பட்டது. இதில் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா. பட்டியலில் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் தருகிறார்கள்.

Read More

கோவை கிணத்துக்கடவு மயானத்தில் சடலம் அடக்கம் செய்ய தொந்தரவு பொதுமக்கள் புகார்

கோவை கிணத்துக்கடவு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள சிக்கலாம்பாளையம், அண்ணாநகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளுக்கு கிணத்துக்கடவு சொலவம்பாளையம் கிராமத்தில் மயான இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் எங்கள் வழக்கப்படி பல தலைமுறைகளாக இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றோம். இடமானது அரசு ஆவணங்களில் அரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என பதிவாகி உள்ளது. மயானத்திற்கு ஆரம்ப காலத்தில்…

Read More

கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சி விசாரணை நிறைவு

கோவை விமான நிலையம் அருகே உள்ள காட்டு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி, கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அரிவாளை காட்டி மிரட்டியதுடன், ஆண் நண்பரை தாக்கி அவரை விரட்டி விட்டனர். மேலும் அந்த மாணவியை அங்கிருந்து கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். மூன்று பேர் சேர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக…

Read More

கோவை மாவட்டத்தில் 26. 96 லட்சம் இறுதிப்பட்டியல் வாக்காளர்கள்..

கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது . கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பட்டியலை வெளியிட்டார்.இதில் மாவட்ட அளவில் 26,96, 813 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 1300889, பெண் வாக்காளர்கள் 1395396 மூன்றாம் பாலினத்தினர் 52 8 பேர் உள்ளனர்.கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக 407507 வாக்காளர்களும் வால்பாறையில் குறைந்தபட்சமாக 172284 வாக்காளர்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 19-12-2025 தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர்…

Read More

தமிழக துணை முதல்வர் கோவை வருகை

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி திருப்பூர் பகுதியில் நாளை நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கோவை மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது. நாளை கருமத்தம்பட்டியில் நடக்கும் மாநில இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற உள்ளார். இந்த மாநாட்டில் பல்லாயிரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பங்கேற்க வைக்க திமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Read More

கோவையில் மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு பெண்கள் ஏமாற்றம்

கோவை கலெக்டர் ஆபீஸ் புகார் மனு பெரும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.. கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. மாநில அளவில் 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மாவட்டத்தில் 11.59 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கிறார்கள். ஆனால் இதில் ரேஷன் அரிசி வாங்கும் கார்டுதாரர்கள் 60% பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட அளவில் பெண்கள் வாக்காளர்கள் சுமார் 14 லட்சம்…

Read More