வெள்ளலூர் பேரு எப்படி வந்துச்சு தெரியுமா..

கொங்கு நாட்டின் சிறப்பு மிக்க ஊர்களில் வேளீர் ஊர் குறிப்பிடத்தக்கது. 1842, 1871, 1932ம் ஆண்டில் இந்த ஊரில் பூமியில் பல்வேறு இடங்களில் புதையல் கிடைத்தன. ஒரு இடத்தில் கிடைத்த புதையலில் 1212 ரோமானிய காசுகள் இருந்தன. அகஸ்டஸ். திபிரியஸ் காலத்தை சேர்ந்த இந்த காசுகளை தொல்லியல் ஆராய்ச்சி துறையினர் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர் . இந்த காசு முதல் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது . இதன் மூலமாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய…

Read More

எஸ் ஐ ஆர் வேலை ரொம்ப வேகமா போகுதுங்க..

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் (எஸ்ஐஆர்) நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 3117 ஓட்டு சாவடிகள் இருக்கிறது. சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒரு ஓட்டு சாவடிக்கு ஒரு பூத் லெவல் ஆபீசர் (பிஎல்ஓ) என நியமிக்கப்பட்டு தேவையான படிவங்களை தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ளனர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்கி பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் இந்த பணிகள் நடக்கிறது. வரும் டிசம்பர் 4ம்…

Read More

கட்டு கட்டா சிக்குச்சு 40 லட்ச ரூபாய்…

கோவை மாவட்ட எல்லையான வேலந்தாவளம் பகுதியில் கேரள மாநில போலீசார் இன்று காலை சோதனை செய்தபோது காரில் வந்த ஒரு நபரிடம் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது தனது பெயர் சுதீர் எனவும் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார். அங்கே நகை கடை நடத்தி வருவதாகவும் பழைய தங்க நகைகளை கோவை நகரில் விற்பனை செய்து விட்டு அந்த பணத்தை கொண்டு வருவதாகவும் கூறி இருந்தார்…

Read More

கோவையில் மூன்று மாத குழந்தை கொடூர கொலை?!

கோவை காளப்பட்டியிலிருந்து கோவில்பாளையம் செல்லும் ரோட்டில்பிறந்து சில மணி நேரமான ஆண் சிசு உடல் துண்டித்து கிடந்தது.முகத்தில் வெட்டு காயம் மற்றும் உடல் இடுப்பு பகுதியை தனியாக துண்டித்து ரோட்டில் வீசி இருப்பதாக தகவல் பெற வேண்டும். . ரோட்டில் கிடந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொடூர செயலை செய்த நபர் யார் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிவு…

Read More

மாணவி பலாத்கார வழக்கில் மூன்று பேரிடம் விசாரணை

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கல்லூரி மாணவி கடந்த இரண்டாம் தேதி தனது ஆண் நண்பருடன் நள்ளிரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 25 வயதான கருப்புசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோர் அங்கே மது போதையில் ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பதாக தெரியவந்தது .இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர் . மூன்று பேர்…

Read More

தர்ம லிங்கேஸ்வரா…

மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் ஆலயத்தில் அமாவாசை பௌர்ணமி பிரதோஷம் சிவராத்திரி நாட்கள் மட்டுமின்றி இதர நாட்களிலும் பொதுமக்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Read More

லைசென்ஸ் புதுப்பிக்க துப்பாக்கியுடன் குவிந்த உரிமை தாரார்கள்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கி பயன்படுத்துவோர் தங்களது துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பிக்க இன்று அதிகளவு குவிந்தனர். துப்பாக்கியுடன் உரிமை தாரர்கள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம்(பொது )துப்பாக்கி மற்றும் ஆவணங்களை காண்பித்து தங்கள் மீது துப்பாக்கியின் மூலமாக எந்த குற்றங்களும் இல்லை என தெரிவித்து உரிமம் புதுப்பித்து சென்றனர். பெரும்பாலான நபர்கள் ஏகே ரக துப்பாக்கிகளை வைத்திருந்தனர். பண்ணை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் சிலர் துப்பாக்கி பெற்றிருந்தனர். லைசெனஸ் புதுப்பிக்க…

Read More

ரூ. 1800 கோடி ரெடி..6 வழிப்பாதை ஆகுது மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ்..

கோவை மாவட்டத்தில் பிரதான பைபாஸ் ரோடாக மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு அமைந்துள்ளது. கடந்த 1999 ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த பைபாஸ் தான் கோவை கேரளாவுக்கான இணைப்பு பாதையாக இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூல் 5 மையங்களில் நிறுத்தப்பட்டது. மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டு வருகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (நகாய்) சார்பில் இந்த பைபாஸ் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பைபாஸ் பேராட்டில் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது. 26.2…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோடு விரைவில் திறப்பு

கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் 250 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11 கிலோமீட்டர் தூரம் நடக்கும் இந்த பணிகள் 90 சதவீதம் வரை முடிவு பெற்றுள்ளது. இன்னும் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு கூடுதல் தார் தளம் அமைக்க வேண்டி இருக்கிறது. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மொத்த பணிகள் முடிந்து விடும். வரும் ஜனவரி மாதம் இந்த பைபாஸ் ரோட்டை திறக்க மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரம்…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் வழங்கும் விழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் மற்றும் பல்வேறு வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வங்கியில் சார்பில் கல்வி கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Read More