6.50 லட்சம் பேர் இல்லை அப்புறம் எதுக்கு அத்தனை ஓட்டு சாவடி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணி தொடர்பான தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . இதில் அரசியல் கட்சியை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . அப்போது கட்சி நிர்வாகிகள் மாவட்ட அளவில் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் .இந்த நிலையில் கூடுதலாக 446 ஓட்டு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது .வாக்காளர்கள் அதிகமாக நீக்கப்பட்ட நிலையில் கூடுதல் ஓட்டு சாவடி எதற்கு….

Read More

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர். நடப்பாண்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். குறை தீர்க்கப்படுகிறதோ இல்லையோ கூட்டம் குறையவில்லை. தொடர்ந்து ஒரே பிரச்சனைக்காக பலமுறை மனு கொடுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. கால் கிடைக்க மக்கள் கூட்டமாக காத்திருக்கும் நிலையை பார்த்தால் அதிகாரிகள் எந்த அளவுக்கு வேலை செய்கிறார்கள் என தெரிந்துவிடும்….

Read More

19 முறையாக வெடிகுண்டு மிரட்டல்…

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை ஒரு இமெயில் வந்திருந்தது. அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதே பெயரில் சில முறை இ மெயில் வந்திருந்தது. இதை தொடர்ந்து தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடக்டர் மூலமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இதே போல் இமெயில் மூலமாக மிரட்டல்…

Read More

கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதிகள்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஆலாந்துறை பகுதி சேர்ந்த வெங்கடாசலம் (55), இவர் மனைவி நாகமணி ஆகியோர் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது தங்களது கையில் இருந்த கரசினை இருவர் தலைமீது ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றனர். அதற்குள் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து தீப்பெட்டியை பறித்தனர். அவர்கள் கதறி அழுது கொண்டே போலீசாரிடம் கூறுகையில் எங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு…

Read More

குழந்தைகளுடன் நர்சுகள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நர்சுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் . இன்று நான்காவது நாளாக போராட்டம் நடந்தது . இதில் பங்கேற்ற நர்சுகள் தங்களது குழந்தைகளையும் போராட்டத்தில் பங்கேற்க வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்..

Read More

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்…

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய குழு கமிட்டி அமைக்க வேண்டும் தாயுமானவர் திட்டத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்ய வேண்டும் அனைத்து ரேஷன் ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் ரேஷன் கடை பணியாளர்கள் வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இதன் முன்னோட்டமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் சங்க தலைவர்…

Read More

கோவை பெருநகர வளர்ச்சி குழுமம் அமையுமா..?!

கோவை மாவட்டத்தில் உள்ளூர் திட்ட குழுமம் குழுமம் மூலமாக லே அவுட், கட்டட வரைவு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 20 ஆண்டிற்கும் மேலான காத்திருப்புக்கு பின்னர் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 2 ஆண்டிற்கு முன் கோவை பெரு நகர வளர்ச்சி குழுமம் (கோவை அர்பன் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குறிப்பாக செயலாளர் அந்தஸ்தில் அதிகாரி மூலமாக இந்த குழுமம் உருவாக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இயக்குநர், துணை…

Read More

இரு கார், லாரி மோதல் ki

கோவை சரவணம்பட்டி பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் லாரி டிரைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட அவர் நிதானம் இழக்க ஆரம்பித்தார். அவரால் வாகனம் சரியாக ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த இரண்டு கார்கள் லாரிக்கு இடையில் சிக்கிக்கொண்டது. அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. இருந்த போதிலும் சுதாரித்த லாரி டிரைவர் பிரேக் பிடித்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Read More

6000 முறை யானைகள் ரயில் பாதைகள் கடந்தன..

கோவை மாவட்டத்தில் மதுக்கரை எட்டி மடை இடையே ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைக்கு இடையே இரு இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இந்த ரயில் பாதையில் ரயில் மோதி 32 யானைகள் இறந்துள்ளன . இந்த நிலையில் யானைகள் பாதுகாப்பாக ரயில் பாதை கடக்கும் வகையில் இரு இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது இந்த சுரங்க பாதை வழியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் யானைகள் 6 ஆயிரம் முறை சென்று வந்துள்ளன இந்த சுரங்கப்பாதை அமைத்த…

Read More

விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பேன்.. சண்முக பாண்டியன் பேட்டி

கோவை சினிமா தியேட்டரில் கொம்பு சீவி சினிமா திரைப்படம் வெளியானது. இதன் பிரமோசனுக்கு படத்தின் ஹீரோ விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் வந்திருந்தார். அப்போது அங்கே வந்திருந்த ரசிகர்கள் சண்முக பாண்டியனுக்கு தடபுடலாக வரவேற்பு தந்தனர். அப்போது பேசிய சண்முக பாண்டியன் எனது அப்பா விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வமாக எதிர்பார்ப்பில் இருக்கிறேன். ஆனால் அதற்கேற்ற டைரக்டர் அமைய வேண்டும். இது நடந்தால் கேப்டன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பேன். கொம்பு சீவி…

Read More