கோவையில் மேஸ்திரி கள்ளக்காதலியுடன் ஓட்டம்: மனைவி புகார்

கோவை சிங்காநல்லூர் நீலி கோணம் பாளையம் பகுதியை சேர்ந்த 38 வயதான கட்டிட மேஸ்திரி ஒருவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மேஸ்திரிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது . தனது மனைவியை மற்றும் குழந்தைகளின் நகை மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து அதனை கள்ளக்காதலிக்கு செலவு செய்து அவர் ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் இவரது மனைவி வீட்டில் இருந்த பொருட்களை…

Read More

கோவை மதுக்கரையில் யானைகள் நடமாட்டம் கண்டறிய ட்ரோன் கண்காணிப்பு பிரிவு

கோவை மதுக்கரை வனப்பகுதியில்வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு இன்று திறக்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இந்த பிரிவை துவக்கி வைத்தார். இதில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுக்கரை வனப்பகுதி ரயில் பாதைகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க, வனத்துறை ஏ ஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்தியது. தமிழ்நாடு ஆளில்லா வான்வழி…

Read More

கோவையில் தோட்டக்கலையில் 9105 பேருக்கு மானியம்

கோவை மாவட்டத்தில் சின்னத்தடாகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பசுமை குடிலில் ஜெர்பரா மலர் சாகுபடி நடக்கிறது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு செய்தார் . தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், 40 சதவித மானியத்தில் தோட்டக்கனை’ பாயிர்கள் பரப்பு அதிகரித்தல், வாழைத்தார் பாதுகாப்பு உறை வழங்குதல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல் , நிழல் வலை கூடாரம், நிலப்போர்வை…

Read More

கோவை மாவட்டத்தில் ‘என் ஊரு என் கனவு’ விஷன் 2030 திட்டம்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் என் ஊரு. என் கனவு என்ற விஷன் 2030 திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை, வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம், குடிநீர் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் தொடர்பாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது….

Read More

கோவையில் குடும்ப வருமானம் எவ்வளவு: புள்ளியியல் துறை விரைவில் கணக்கெடுப்பு

கோவை ராம் நகரில் உள்ள மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக அதிகாரிகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது தேசிய குடும்ப வருமான கணக்கெடுப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் ஆண்டுக் கணக்கெடுப்பு (ASISSE) நடக்கவுள்ளது. இது தொடர்பான பிராந்தியப் பயிற்சி முகாம் வரும் 2 மற்றும் 5ம் தேதிகளில் நடத்தப்படும். வரும் ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். கோவை பிராந்திய அலுவலகம் மற்றும் திருச்சி, சேலம், தர்மபுரி துணை பிராந்திய…

Read More

சட்டமன்ற தேர்தலில் முறைகேடு: ‘ஆப்’ மூலமாக புகார் பெற உத்தரவு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி அலுவலர்கள். பயிற்றுநர்களுக்கான ஆலோசனை மற்றம் பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் கமிஷன் டெக்னிக்கல் திட்ட இயக்குநர் சவுரவ் ராய் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக புரஜக்டரில் பயிற்சி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி. விஜில், இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இசிஐ நெட் 40க்கும் மேற்பட்ட பல்வேறு தேர்தல் செயலிகளை…

Read More

சந்திர கிரகணம்: மருதமலை கோயில் நடை சாத்த உத்தரவு

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் 3ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரஹணம் நடக்கவுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் மதியம் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நடைதிறப்பு வரும் நான்காம் தேதி காலை 6 மணி அளவில் நடைபெறும். அந்த நேரத்தில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருகோயில் துணை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் கோவை…

Read More

கோவையில் வந்தாச்சு பாம்பு மீட்பு படை..!

கோவை நகரில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாம்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி விட்டது. வீடுகளில் பாம்பு புகுந்து விட்டதாக பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர் . சில நேரங்களில் தீயணைப்புத் துறையினர் வர தாமதம் ஏற்படுகிறது .மேலும் பல்வேறு இடங்களில் பாம்புகள் நடமாட்டத்தினால் பொதுமக்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையை தவிர்க்க தன்னார்வ அமைப்பினர் உதவியும் மூலமாக கோவையை சேர்ந்த அமீன், விக்னேஷ் ஆகியோருக்கு இரண்டு இரு…

Read More

கோவையில் டிரேடிங் ஆப் மூலம் பல கோடி ரூபாய் மோசடி..!

கோவை நகரில் பொது மக்களுக்கு whatsapp மூலமாகவும் சோசியல் மீடியாக்கள் மூலமாகவும் டிரேடிங் சம்பந்தமான மெசேஜ் அதிகமாக வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் மாதந்தோறும் அதிக வட்டி வழங்கப்படும். வீட்டில் இருந்தபடி அதிக பணத்தை பெற டிரேடிங் முதலீடு உதவியாக இருக்கும் என தெரிவிக்கிறார்கள் இதை நம்பி முதலீடு செய்பவர்களுக்கு ஓரிரு மாதங்கள் உரிய தொகை வழங்கப்படுகிறது. அதற்கு பின்னர் அதிக முதலீட்டை பெற்று ஏமாற்றி வருகிறார்கள். கோவை புதூர் பகுதியை சேர்ந்த சுசித்ரா…

Read More

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவையில் ஆய்வு..!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கோவை வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரம்மாண்டமாக 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ஏழு தளங்களில் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட வரும் இந்த நூலகம் பொதுமக்களுக்கு அதிக பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் மற்றும் பொருட்களை முதல்வர் பார்வையிட்டு…

Read More