காண்டா மிருகம் கான மயிலை காக்க வனத்துறை அமைச்சகம் திட்டம்
கோவையில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் 91-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது: இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது அறிவியல் திட்டமிடல், விலங்குகளின் வாழ்விட இணைப்பை பாதுகாத்தல் மற்றும் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தொழில்நுட்ப ஆய்வுகள், சமூக ஆய்வுகள்…
