பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் அதிநவீன எந்திரங்கள் மற்றும் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு வழக்கம்போல் பணிகள் முடிந்ததும், ஊழியர்கள் குடோன் மற்றும் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில், குடோன் உள்ளே இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்திற்குள் தீ பரவி,…
