கோவை போலீசார் நைட் ரவுண்ட்ஸ், புட் பேட்ரோல் தீவிரம்…!
கோவை நகரில் சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக, போதை பொருட்கள் கடத்தல், குற்ற செயல்கள் அதிகமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் இரவு காவல் பணியில் அலட்சியமாக இருப்பதால் அசம்பாவிதம், மோதல் தடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதை தொடர்ந்து மாநகரில் இரவு ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஜி.எச். பிரதான ரோடு குறிப்பாக அவினாசி ரோடு பகுதிகளில் போலீசார் இரவில் அடிக்கடி சோதனை செய்கின்றனர். சந்தேக நபர்கள் வீடியோ பதிவு செய்யப்படுகிறார்கள்….
