கல்லூரி ஹாஸ்டல் கேண்டீன் உணவில் புழு, பூச்சி மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் ஹாஸ்டல் அமைந்துள்ளது. இங்கே மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இன்று இரவு மாணவ மாணவிகள் இட்லி தோசை சாப்பிட்டனர். அப்போது சாம்பாரில் புழு பூச்சிகள் காணப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் விடுதி வளாகத்தில் ஒன்று திரண்டனர் . கேண்டினில் தயாரிக்கப்படும் உணவு தரமாக இருப்பதில்லை புழு பூச்சி கரப்பான்…
