பொதுப்பணி துறை ஆபீசுக்கே தண்ணீர் கஷ்டம்…
கோவை டவுன்ஹால் பகுதியில் பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. கட்டுமானம், பராமரிப்பு, மின் பராமரிப்பு, பாய்லர், நிலத்தடி நீர்மட்டம் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. பல நூறு ஊழியர்கள் இங்கே வேலை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்தில் போர்வெல் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அலுவலர்களுக்கான குடிநீர் கேன் மூலமாக பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பிஏபி, நொய்யல், பவானி என முக்கிய நீர் ஆதாரங்களை…
