கோவையில் நீர் குட்டை அழிக்கப்படுவதாக புகார்
கோவை மணியகாரம்பாளையத்தில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் வழியில் சுப்பநாயக்கன்புதூரில் உள்ள நீர்பிடிப்பு குட்டை காணவில்லை என்று விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய புகார் மனுவில், “சுப்பநாயக்கன்புதூர் கிராமத்தில் 2.70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குட்டையை இருந்தது. இந்த குட்டையை கடந்த 2022-23ம் ஆண்டில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.8 லட்சம் செலவில் தூர்வாரி, குட்டையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் அறிவிப்பு பலகையும்: வைக்கப்பட்டது….
