புழுதி பறக்கும் லாரி…கல்குவாரிகளுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் 160 கல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த கல் குவாரிகளின் இயக்கத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பில் கட்டுபாட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

குவாரிகள் அனைத்தும் கம்பி வேலி போட்டு பாதுகாப்பாக நடத்த வேண்டும். வேலியை தாண்டி கால்நடைகள், மனிதர்கள் செல்வதை தடுக்க வேண்டும். வெடி வைக்கும் உரிய வெடி மருந்து சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு, கால்நடைகளுக்கு, விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பாக

வெடி வைக்க வேண்டும். கற்கள் குவாரிகளுக்கு வெளியே செல்ல கூடாது. குவாரிகளை முறையாக இயக்கவேண்டும். கனிம பொருட்கள் லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் முறையாக பாதுகாப்பாக செல்ல

வேண்டும். கற்கள், கிராவல் பறக்கும் வகையில் இருக்க கூடாது. லோடு மூடிய படிய கொண்டு செல்லவேண்டும். கேரள மாநிலங்களுக்கு கனிம பொருட்களை கொண்டு செல்ல கூடாது. ஏற்கனவே தடை

இருப்பதால் முறைகேடாக கனிம பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும். அனைத்து கல் குவாரி நிர்வாகங்களும் ஆன்லைனில் பதிவு செய்து கனிமங்களை எடுக்கவேண்டும். இல்லீகலாக மைனிங் செய்யக்கூடாது. உரிய அளவின் படி கனிமங்களை எடுக்க வேண்டும். புழுதி பறக்கும் வகையில் டிப்பர் லாரிகளை இயக்கக் கூடாது. பாதுகாப்பு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கனிம வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2 thoughts on “புழுதி பறக்கும் லாரி…கல்குவாரிகளுக்கு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *