K. V

பஸ் சக்கரத்தில் தலை வைத்து விபரீத தற்கொலை

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு டவுன் பஸ்ஸில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த பஸ் வாளையார் நோக்கி புறப்பட்டபோது அங்கே பேண்ட் சர்ட் அணிந்திருந்த சுமார் 25 வயது வாலிபர் திடீரென பின் சக்கரத்தில் தலை வைத்து படுத்து விட்டார். பஸ்ஸின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரிக்கிறார்கள். பயணியில்…

Read More

32 வருஷமா கைவரிசை காட்டிய கில்லாடி கைது..

கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ஜெப மார்ட்டின் (45). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியை. கடந்த 24ம் தேதி இரவு ஜெப மார்ட்டினுக்கு அவரது உறவினர் ஒருவர் சாத்தான்குளத்தில் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் அன்று இரவு தனது மகள்களை அழைத்து கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு சென்றார். அங்கு துக்க நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 26ம் தேதி காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு…

Read More

ரேஸ் கோர்ஸ் நியூ இயர் பார்ட்டிக்கு கட்டுப்பாடு

கோவை ரேஸ் கோர்ஸ் வாக்கிங் ஏரியா மற்றும் மீடியா டவர் பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதேபோல் ஆர் எஸ் புரம் ஸ்மார்ட் சிட்டி கிளாக் டவர் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் தினமும் அதிகமாக உள்ளது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரவு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கூட்டமாக குவிந்து பார்ட்டி கொண்டாட உள்ளனர். குறிப்பாக டான்ஸ் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடக்க உள்ளது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு…

Read More

துப்பாக்கியால் சுடப்பட்ட 3 கொள்ளையர்களுக்கு குண்டாஸ்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி3 பிளாக்கில் 10 வீடுகளிலும் கடந்த மாதம் நகை பணம் திருடப்பட்டது. இந்த வீடுகளில் திருட்டு நடந்த விவரம் அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டனர். இது தொடர்பான தகவல் அறிந்து கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்….

Read More

அதிக திட்டங்களை செய்தோம்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு..

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹாக்கி மைதானம் திறப்பு விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார். ரூ.31,72 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.162.52 கோடி மதிப்பீட்டில் 107 முடிவற்ற திட்டப்பணிகளை…

Read More

நெஞ்சில் ஒரே குத்து.. உயிரிழந்த தொழிலாளி..

கோவை உக்கடம் பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருபவர் பாசித் (36). இவர் தனது நண்பர் பிரகாஷ் (38) என்பவருடன் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த உக்கடம் பகுதியில் உள்ள ஓட்டலில் கூலி வேலை செய்து வரும் சிராஜ் (22) நின்று கொண்டிருந்தார். ‌ இந்த நிலையில் பாசித் பின்னால் நின்ற சிராஜை கவனிக்காமல் ஆட்டோவை ரிவேர்ஸ் எடுத்துள்ளார். ஆட்டோ சிராஜ் மீது மோதியது….

Read More

ஜாலியா , ஜாக்கிரதையா இருங்க.. நியூ இயருக்கு போலீஸ் அலார்ட்..

கோவை நகரில் புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் போலீசார். அதிகளவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். ஜிடி நாயுடு பாலம், உக்கடம் மேம்பாலம் போன்றவற்றில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நகரில் பல்வேறு இடங்களில் அதிக வேகத்தில் வாகனங்களில் செல்பவர்களை தடுக்க, மது போதையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்பவர்களை மடக்கி பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் செக்போஸ்ட்…

Read More

அமெரிக்க மாணவியை மனைவியாக்கிய கோவை வாலிபர்…

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ராமன் நம்பீசன், உமா ஆகியோர் கோவை குனியமுத்தூரில் வசிக்கின்றனர். இவர்கள் மகன் வாசு தேவன் (30). இவர் அமெரிக்காவில் விண்வெளி மையத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார் இவருக்கும் அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்த சைமன் கசாஸ், கிறிஸ்டின் கசாஸ் ஆகியோரின் மகளான கட்டட கலை படித்து வரும் மாணவியான கரோலின் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலானது. இரு தரப்பினரும் தங்களது காதல் விசயத்தை பெற்றோரிடம் கூறினர். இரு தரப்பு…

Read More

காந்திபுரம் பெரியார் சிலை இடமாற்றம்

கோவை காந்திபுரம் விரைவு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தந்தை பெரியார் சிலை வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு காந்திபுரம் மேம்பாலம் கட்டும் பணிக்காக சிலை இடையூறாக இருப்பதாக கருதி சிறிது தூரம் இடமாற்றி அமைக்கப்பட்டது. மேம்பாலம் பணி முடிந்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நிலையில் சிலை மீண்டும் பழைய இடத்தில் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் சிலையை மீண்டும் பழைய இடத்திற்கு வைக்க அனுமதி வழங்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்….

Read More

10,626 பேருக்கு நலத்திட்ட உதவி

கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (30ம் தேதி) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா முடிந்த பணிகள் திறப்பு விழா நடக்கவுள்ளது. காலை 10 மணிக்கு நடக்கும் இந்த விழாவில், 12 புதிய பணிகளுக்கு 31 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டப்படும். பள்ளி மைதானத்தில் 6500 சதுர மீட்டர் பரப்பில் 9.67 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரக்கிலான ஹாக்கி மைதானம் என 162.52…

Read More