K. V

பல்லடம் அருகே கார் லாரி விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி…!

சேலம் கடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனபால் ( 37). இவர் மனைவி மேனகா (35 ). இவர்களது மகள் கனிஷ்கா (17). மகன் சுர்ஜித் (12 ). மேனகாவின் சகோதரர் மகள் சினேகா (23). இவர்கள் ஐந்து பேரும் இன்று மதியம் காரில் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் . அப்போது வி ஜே நிறுவனம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அதிவேகமாக கட்டுப்பாட்டை இறந்து குரூஸர் கார் மீது மோதியது ….

Read More

கோவையில் பள்ளி வாகனங்கள் விரைவில் ஆய்வு…

கோவை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் பிரேக், பாதுகாப்பு கருவிகள், வேக கட்டுபாட்டு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடிக்கடி சோதனை நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் பள்ளிகள் துவக்கப்படவுள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்படவில்லை. மாவட்ட அளவில் 1200க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. இதில் சில வாகனங்கள் பள்ளி வாகனங்கள் என்ற பெயரில் வேறு சில பயன்பாட்டில் இருக்கிறது. தகுதி இல்லாத நிலையில்,…

Read More

கோவையில் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு…

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்பட்டு வருகிறது. எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முது நிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் கடந்த…

Read More

கோவையில் ‘பிட்னஸ் ஊசி’ பயன்படுத்திய ஜிம் பயிற்சியாளர் மர்ம சாவு

கோவை வடமதுரை அருகே உள்ள குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). காளப்பட்டி நேரு நகர் பகுதியில் இவர் ஜிம் பயிற்சியாளராக வேலை செய்தார். வினோத் குமார் தனது உடலை பிட் ஆக வைத்திருக்க சில புரோட்டின் மற்றும் தாது பொருட்கள் அதிகம் உள்ள ஊசி மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இவர் தொடர்ந்து இது போல் செய்வது அறிந்த அவரது குடும்பத்தினர் இயற்கை உணவு எடுத்துக் கொள்ளவும் மருந்து பொருட்களை தவிர்க்க வேண்டும் என…

Read More

கோவையில் சடலத்துடன் சாலை மறியல்: 9 பேர் மீது போலீசார் வழக்கு…!

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவர் மனைவி ராக்காயி (60). இவர்களுக்கு மூன்று மகள் இரண்டு மகன் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மகா மகேஸ்வரன் (29) என்பவர் கடந்த எட்டாம் தேதி சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதன் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக…

Read More

கோவையில் மதிப்பெண் குறைவினால் பள்ளி மாணவி தற்கொலை…!

கோவை கணபதி தங்கம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் யாழினி (17). இவர் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் யாழினி 4 5 4 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் இந்த மதிப்பெண் போதுமானதாக இல்லை என தனது தாய் நர்மதாவிடம் கூறி அழுது கொண்டிருந்தார் மேலும் தனக்கு மிகவும் குறைவான மதிப்பெண் வந்திருக்கிறது. இதை வைத்து தான் விரும்பிய பாடத்தை தேர்வு…

Read More

கோவையில் வாலிபரை கொலை செய்து விட்டதாக உறவினர்கள் சாலை மறியல்…!

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் மனைவி ராக்காயி (60). இவர்களுக்கு மூன்று மகள் இரண்டு மகன் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மகா மகேஸ்வரன் (29) என்பவர் கடந்த எட்டாம் தேதி சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதன் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக…

Read More

கோவை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு…96.66 சதவீத தேர்ச்சி…!

கோவை மாவட்டத்தில் 2026ம் ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடந்தது. இந்த பொதுத்தேர்வில் 96.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 13வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 35,448 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் . இதில் 34,264 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் மட்டும் 16,235 பேர் தேர்வு எழுதியதில் 15,531 பேரும், மாணவிகள் 19,213 பேர் தேர்வு எழுதி 18,733 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…

Read More

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் மாணவர் சேர்க்கை…

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் இன்று துவங்கியது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிஎஸ்சி (ஆனர்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டுவளர்ப்பு, பிடெக் வேளாண் பொறியியல், பிடெக் உணவு தொழில்நுட்பம், பிடெக் உயிரி…

Read More

கோவையில் அரசு அதிகாரிகள் லீவு… புகார் மனுக்களுக்கு எப்போது தீர்வு…!

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், மாவட்ட அளவில் பல்வேறு துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து சென்று விட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலான துறை அதிகாரிகள் கடந்த 7 நாட்களாக பணிக்கு வரவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, உள்ளூர் திட்ட குழுமம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை என பல்வேறு துறைகளில் அதிகாரிகள் விடுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக…

Read More