கோவை திமுக நிர்வாகி பதவி ராஜினாமா..!

கோவை திருமலையம்பாளையம் திமுக நிர்வாகி ரமேஷ் குமார் திமுக பொதுச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; நான் திருமலையம்பாளையம் பேரூர்கழகத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக கழகப்பணி செய்துவருகிறேன். கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேரூர்கழக இளைஞரணி அமைப்பாளராக திறம்பட செயலாற்றி பல இன்னல்களை சந்தித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய பிரதிநிதியாக கழகம் அளித்த அனைத்து பணிகளையும் செய்துவருகிறேன். கடந்த 6 தேர்தல்களில் பாகமுகவராகவும், வாக்கு எண்ணிக்கை முகவராகவும் செயல்பட்டுள்ளேன். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பேரூராட்சி…

Read More

கோவையில் ரமலான் நோன்பு கஞ்சி வினியோகம்..

ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிக காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை நோன்பு நோற்று, இறை வழிபாடுகள் மற்றும் தர்ம செயலில் ஈடுபடுவது வழக்கமாகும். அந்த வகையில், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில், நோன்பு திறக்கும் நேரத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. சமூக ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நோன்பு கஞ்சி பெறுவதற்காக சிறுவர் முதல் முதியோர் வரை ஏராளமானோர்…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு..!

பாம்பு படுத்திருந்த பிரதான கேட் பகுதி.. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பாம்பு சுற்றியது. இது தொடர்பாக தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கே சென்று பார்த்த போது பிரதான கேட் அருகே சாரை பாம்பு படுத்திருந்தது. அதை பிடித்து எடுத்து சென்றனர். கடந்த சில மாதம் முன் கலெக்டர் அலுவலக கார் நிறுத்துமிடத்தில் நாக பாம்பு கண்டறியப்பட்டது. பாம்பு நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கலெக்டர்…

Read More

கோவையில் ஏலம் போகாத டாஸ்மாக் பார்கள் விரைவில் மூட உத்தரவு..

கோவை மாவட்டத்தில் வடக்கு கலால் எல்லைக்குள் 156 டாஸ்மாக் மதுபான கடைகளும், தெற்கில் 127 மதுபான கடைகளும் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கான பார்களுக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலான மதுபான கடை பார்கள் ஏலத்திற்குள் வரவில்லை .‌ தெற்சில் 25 பார்களும், வடக்கில் 27 பார்களும் நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆன்லைனில் டெண்டர் விண்ணப்பம் செலுத்தியவர்கள் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர், கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலத்தில் பங்கேற்றனர். ஏல தொகை…

Read More

கோவையில் பதட்ட ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு பணி..போலீசாருக்கு பயிற்சி வகுப்பு

கோவை ஆர்.எஸ் புரம் கலையரங்கில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பதட்ட ஓட்டு சாவடிகளை கையாளும் முறை தொடர்பாக மண்டல வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், போலீஸ் துணை கமிஷனர் திவ்யா, தேர்தல் பிரிவு கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரிவினர் பயிற்சி வழங்கி பேசுகையில், ” கோவை மாவட்ட அளவில் 3524 ஓட்டு சாவடிகள்…

Read More

கோவை கேரள எல்லையில் 1305 ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பாகைகளில் செக்போஸ்ட்டுகள் இருக்கிறது வாளையார் வேலந்தாவளம் சொக்கனூர் கோபநாரி உள்ளிட்ட 13 இடங்களில் செக்போஸ்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சில இடங்கள் மாநில எல்லைக்குள் சென்று வரும் பாதைகளாக இருக்கிறது. இந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தல் கண்டறிய ரகசிய தகவல்கள் மற்றும் சில நேரங்களில் நடத்தப்படும் சோதனைகளில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் மாநில எல்லைப்பகுதியில்…

Read More

கோவையில் மகளிர் குழு பெயரில் மோசடி; போலீசார் வழக்கு

கோவை அரசு மருத்துவமனை அருகே கடந்த 16 வருடங்களாக தனியார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக கடன் தொகை வழங்கப்படுகிறது. அந்த தொகையை மகளிர் சுய உதவி குழுவினர் மாதந்தோறும் அறக்கட்டளைக்கு திருப்பி செலுத்தி வருகின்றனர். அவர்களிடம் பணம் வசூல் செய்ய அறக்கட்டளை நிர்வாகம் ஊழியர்களை நியமனம் செய்துள்ளது. அதேபோல 65 குழுவினரிடம் பணம் வசூல் செய்ய பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முனிராஜா என்பவரை…

Read More

கோவை சிறையில் கைதி பல்பை உடைத்து தகராறு..!

ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த ஆசிப் என்கிற முஸ்தகின் (33 ). இவர் சட்டவிரோத செயல்பாடு காரணமாக கடந்த 2024 ம் ஆண்டு ஈரோடு வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் இவர் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டில் இவரை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்த சிறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . இவரை நேற்று மதியம் சிறையின் பத்தாவது…

Read More

கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்..! எப்எல் பார்கள் திறப்பு

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் பணி வரன்முறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை பணியை புறக்கணித்து போராட்டம் நடத்துவோம் டாஸ்மாக் மதுபான கடையை திறக்க மாட்டோம் என ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவையில் மட்டுமல்ல மாநில அளவில் டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை மூடப்பட உள்ளது. இந்த நிலைமையில் மாநில அளவில் 11…

Read More

கோவையில் ஓடும் பஸ்ஸிலிருந்து மாணவி காயம்

திருப்பூரில் இருந்து கோவைக்கு இன்று அதிகாலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் கல்லூரி மாணவி ஒருவரும், அவருடன் வாலிபர் ஒருவரும் பயணம் செய்தனர். பஸ்சில் இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தனர். சிறிது நேரத்தில் பஸ்சுக்கு உள்ளேயே இருவருக்கும் திடீரென்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்தபடியே பஸ்சில் பயணம் செய்துள்ளனர். இதற்கிடையே…

Read More