கோவையில் போதை அடாவடி அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேருக்கு கத்திக்குத்து..!

கோவை சிங்காநல்லூர் பகுதியை அதிமுகவை சேர்ந்த பேரவை இணை செயலாளர் ஈசா செந்தில், வட்டக் கழக செயலாளர் சுரேஷ்குமார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் பொதுவெளியில் மது குடித்த கும்பலை இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டித்தனர். இனி பொதுவெளியில் மது குடிக்க கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று இரவு சுரேஷ்குமார் ஈசா செந்தில் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த மர்ம கும்பல் நாங்க குடிச்சா உங்களுக்கு என்ன வந்துச்சு…

Read More

மாசம் 5 ஆயிரம் போதுமா..? கோவையில் சிறப்பாசிரியருக்கு புகார்..!

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி இன்று இல்லம் தேடி கல்வி சிறப்பாசிரியர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர் ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பாசிரியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இன்று புகார் மனு அளித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முன்…

Read More

விஜய்யை நம்பியும் கட்சியை கலைத்தோம்.. கோவையில் பாரத மக்கள் முன்னேற்ற கழகம் புலம்பல்..!

பார்த மக்கள் முன்னேற்ற கழகம் (பாமமுக) கடந்த ஆண்டு தவெகவுடன் இணைந்தது. கட்சியை கலைத்து விட்டு அந்த கட்சியில் இருந்த அனைவரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார்கள். இந்த நிலையில் நேற்று, நாங்கள் இனி தவெகவுடன் இருக்க மாட்டோம் மீண்டும் தாய் கழகமான பாரத மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கி விட்டோம். பிரிந்து சென்ற நாங்கள், திரும்ப ஒன்றாக வந்து விட்டோம் என அந்த கட்சியின் மாநில தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார் ….

Read More

மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை சாதிய விவகாரம்; கோவை கலெக்டருக்கு நோட்டீஸ்..!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை 1 பிரிவில் சசிராஜ் (42) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இதே கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் பிரகாஷ் குமார் (44) பணியாற்றினார். இவர் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்தவர். அலுவலகத்தில் சசிராஜின் ஒழுங்கீன நடவடிக்கைக்காக பிரகாஷ் குமார் அவருக்கு மெமோ கொடுத்துள்ளார். இந்நிலையில், பிரகாஷ் குமார் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கோவை உக்கடம் அரசு பஸ் போக்குவரத்து கழக அலுவலக கிளை மேலாளராக இடமாற்றம்…

Read More

கோவையில் திமுக பாஜக ஒட்டிய ‘முட்டை போஸ்டரால்’ பரபரப்பு..!

கோவை நகரில் கணபதி, ஒண்டிப்புதூர், எஸ் ஐ எஸ் எஸ் காலனி சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி முட்டை என படம் போட்டு பல இடங்களில் போஸ்டர் ஒட்டி வைத்தனர். இதை பார்த்த பாரதிய ஜனதா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவினருக்கு போட்டியாக இவர்களும் கோவையில் திமுக முட்டை, தீய சக்தி திமுகவை துடைத்தெறிவோம்…

Read More

விஜய் மீது எல்லோருக்கும் பயம்; கோவையில் செங்கோட்டையன் பேட்டி..!

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை இன்று நிருபர்கள் சந்தித்து கேள்வி கேட்டனர். பாஜகவை டப்பா என்ஜின் என்ற நடிகர் விஜயிடம் என்ஜினே இல்லை என்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் செய்தது தொடர்பாக கேட்ட போது தவெகவை தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துள்ளார்கள். இரண்டு இயக்கங்கள் மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டுமா, புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த தவெக…

Read More

கோவை மாவட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள் யாருக்கு சீட்டு..!

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக, பாஜ கூட்டணி வசம் இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் இவர்கள் மொத்தமாக வென்றார்கள். ஆனால் ஓட்டு வித்தியாசம் சொற்ப அளவில் தான் இருந்தது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில், சிட்டிங் எம்எல்ஏக்கள் தொகுதி மாற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் ஒரிரு எம்எல்ஏக்கள் மறுபடியும் சீட் வாங்கி ஜெயிக்க முடியாது. வேண்டாம் விட்டு விடுங்கள் என கூறுவதாக தெரியவந்துள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் மறுபடியும்…

Read More

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது .இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்த வகையில் இருக்கிறது . தற்போது 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் ரமேஷ் என்ற பெயரில் டார்க் நெட் பயன்படுத்தி இமெயில் அனுப்பி…

Read More