எப்படி ஆக்சிடென்ட் நடக்குது… போலீசுக்கு கிளாசு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் மாவட்ட அளவில் நடக்கும் விபத்துக்கள் தொடர்பான போட்டோ வீடியோ ஆதாரங்களுடன் பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் மனிதர்கள் ரோட்டை கடக்கும்போது செய்யும் தவறுகள் அதனால் ஏற்படும் விபத்துக்கள் . வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி செயல்படுவதால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பான காட்சி பதிவுகள் காண்பிக்கப்பட்டது. பல்வேறு பகுதியிலிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை பார்த்த போலீசார் எப்படி எல்லாம் வாகனத்தை ஓட்டுறாங்க எப்படி எல்லாம்…

Read More

கையிலே கலை வண்ணம்.. எல்லாம் மாணவர்கள் எண்ணம்..!

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கையால் தயாரித்த கைவினை பொருட்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் எளிதில் மக்கும் பொருட்கள் மற்றும் சில வீட்டு உபயோக பொருட்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட பொருட்களை வைத்து அழகான கலை நயமிக்க காட்சி பொருள்களை உருவாக்கியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட கைவினைப் பொருள்கள் அலங்காரத்துடன் வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

Read More

ஓட்டு போடறது எப்படிங்க..? டெமோ மிஷன் வருதுங்க..

கோவை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக சட்டமன்ற தேர்தலுக்காக 5463 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு ஓட்டு போட பயிற்சி வழங்கவேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தற்போது ஓட்டு மெசின்கள் சரி பார்ப்பு பணி முடிந்தது. இதில் பயன்படுத்தும் நிலையில் 19,117 மெசின்கள் இருப்பதும், பழுதான நிலையில் 397 மெசின்கள் இருப்பதும் தெரியவந்தது….

Read More

அவிநாசி ரோட்டில் புதுசா நடை மேம்பாலம்..

கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் 1671 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் பாதசாரிகள் கடப்பதற்கு எந்த இடங்களிலும் கடவு பாதை அமைக்கப்படவில்லை. ரோட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மேம்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, தனியார் நிறுவனங்கள் மூலமாக நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் நடை…

Read More

ரேஷன் அரிசி தரமா…? குத்தூசி போட்டு சோதித்த கலெக்டர்..!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தமிழக நுகர் பொருள் வாணிப கழக குடோனில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு நடத்தினார் . இதில் ரேஷன் அரிசி, பருப்பு ,சர்க்கரை ,பாமாயில் தரம் தொடர்பாக பரிசோதனை செய்தார். தற்போது கடும் குளிர்காலமாக இருப்பதால் உணவுப் பொருட்கள் தரமாக இருக்கிறதா, கெட்டுப் போய் உள்ளதா, செல் பூச்சி தாக்குதல் இருக்கிறதா , உணவுப் பொருள்கள் சரியான முறையில் கையாள்கிறார்களா என கலெக்டர் ஆய்வு செய்தார். கோவை மாவட்டத்தில்…

Read More

ஊதியத்திற்கு போராடிய சத்துணவு ஊழியர்கள் உணவுக்கு வாடிய மாணவர்கள்..!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோவை மாவட்ட கிளை சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இதில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஐந்து ஆண்டு பணி முடித்த சமையல் உதவியாளர்களுக்கு உடனடியாக சமையலராக பதவி உயர்வு தர வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் . காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். கேஸ் சிலிண்டரை நேரடியாக…

Read More

பில்லூர் குழாய் டுமீலு.. ரோடு டமாரு..

கோவை மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியில் பிரதான பில்லூர் குடிநீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. மெயின் ரோட்டில் 1500 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட பைப் உடைந்ததால் அந்தப் பகுதி ரோடு பள்ளமாக மாறியது. மேலும் குடிநீர் வீணாகி ரோட்டில் ஆறாக ஓடியது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் குடிநீர் விநியோகத்தை நிறுத்தினர். குழாய் சீரமைப்பு பணிகள் உடனடியாக துவக்கப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில்…

Read More

பத்திரம் பதிவுக்கு பணம் குவியுது..

கோவை வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இன்று அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் பதிவு செய்ய 4 மாதமாக அனுமதி வழங்கவில்லை. பத்திரப்பதிவில் லஞ்சம் கேட்டு நெருக்கடி தரும் வகையில் இப்படி செய்வதாக ஓய்வு பெற்றவர்கள் புகார் அளித்தனர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் தடையின்மை சான்று கேட்கிறார்கள். பணி ஓய்வு பெற்ற பின்னர் எப்படி அரசு துறையில் தடையின்மை சான்று தருவார்கள். இந்தத் துறையில்…

Read More

பாறை வெடியால் பதறுது இரும்பறை..!

மேட்டுப்பாளையம் இரும்பறை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மற்றும் அந்த பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில், “மேட்டுப்பாளையம் இரும்பறை ஓதிமலை செல்லும் வழியில் இரண்டு கல் குவாரி இருக்கிறது. இந்த கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள் வெடி வைத்து எடுக்கப்படுகிறது. நீர் பாதை, வண்டிப்பாதை மறிக்கப்பட்டு கற்களை எடுத்து வருகிறார்கள். பொதுமக்களின் வீடுகளுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு , தூர இடைவெளி கடை பிடிக்கவில்லை. மிக குறைந்த…

Read More