கோவையில் லோ அதாலத்: 7368 வழக்குகளுக்கு தீர்வு..

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா தலைமையில் இன்று கோவை நீதிமன்றங்களிலும் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வால்பாறை, சூலூர், அன்னூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது. முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பாபுலால் வரவேற்றார். கடந்த 2024 ம் ஆண்டு எல் ஆண்டு டி பைபாஸ் ரோடு, மதுக்கரையில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த ரஞ்சித்குமார் குடும்பத்தினருக்கு…

Read More

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கட்டுப்பாட்டு அறை திறப்பு..

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட இடிகரை, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் டவுன் பகுதி, திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிப்பாளையம், கூ.கவுண்டம்பாளையம், கோவனூர், பாலமலை, 4 வீரபாண்டி சாமநாயக்கன்பாளையம், மத்தம்பாளையம், ஒன்னிப்பாளையம், காளிப்பாளையம் மற்றும் தொட்டிப்பாளையம் பகுதிகளில் 236 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் இன்று துவக்கி வைத்தார். கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், குமாரபுரம் முதல்…

Read More

கோவையில் மு க ஸ்டாலின் பிறந்தநாள்: சில்வர் ‘குண்டா’ பரிசு வழங்குவது தாமதம்..!

கோவை மாவட்டத்தில் அதிமுக மற்றும் திமுக பொதுமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை தேர்தலை முன்னிட்டு வாரி வழங்கி வருகிறது. அதிமுக தரப்பில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா என்ற பெயரில் சாப்பாடு தட்டு ஹாட் பாக்ஸ் வேட்டி சேலை போன்றவை வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் ரேஷன் கார்டு அடிப்படையில் அனைத்து வீடுகளுக்கும் குறிப்பாக 11.50 லட்சம் வீடுகளுக்கு பரிசு பொருட்கள் வாரி வழங்கப்பட்டதாக தெரிகிறது….

Read More

கோவையில் கள்ள சந்தையில் கேஸ் சிலிண்டர் விற்பனையா..? கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை..!

சமையல் கேஸ் சிலிண்டர் நுகர்வு தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அரசு துறை அலுவலர்கள், தனியார் ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பேக்கரி, தனியார் விடுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் பேசுகையில், “ வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான புகார்களை வழங்கல்…

Read More

கோவையில் அப்பார்ட்மெண்ட் மூதாட்டி கொலையில் மேலும் ஒருவர் கைது

தாமர் மற்றும் அவருடன் ஏற்கனவே கைதான இரண்டு பேர்.. கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் கடந்த வாரம் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது . இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் . அவரது கழுத்து பகுதியில்…

Read More

கஞ்சா கடத்தல் வட மாநில பெண் கைது

கோவை கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பிரிவு பகுதியில் கருமத்தம்பட்டி போலீஸ் சார் சோதனை நடத்திய போது அங்கே சந்தேகப்படும் வகையில் பெண் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார் . அவரிடம் சோதனை செய்தபோது பிளாஸ்டிக் கவரில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்தனர். அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இஸ் மேதரா காதும் (26) என தெரிய வந்தது. அவர் சொந்த ஊரிலிருந்து கஞ்சா வாங்கி வந்து அதை கோவை கருமத்தம்பட்டி…

Read More

கோவையில் பைக் திருடர்கள் 6 பேர் கைது..! சைடு லாக் உடைத்து கைவரிசை

கோவை நீலிக்கோணம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது சம்பந்தமாக சிங்காநல்லூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருட்டு போன வாகனத்தை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதில் தூத்துக்குடி சாத்தான் குளத்தை பூர்வீகமாக கொண்ட வெள்ளக்கிணறு பாரதி நகரில் வசிக்கும் தங்க இசக்கி (21), இசக்கி முத்து (22), திருச்சி அரிய மங்கலத்தை சேர்ந்த தீபக் (20), சின்ன வேடம்பட்டியை சேர்ந்த மனோஜ் (23) ஆகியோர் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கண்டறியப்பட்டது. 4…

Read More

கஞ்சா வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த அறிவுச்செல்வம் (43) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையைச் சோதனை செய்ததில் 5 கிலோ 250 கிராம் கஞ்சா…

Read More

கோவை மேற்கு ரிங் ரோடு: முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்..

கோவை மதுக்கரை பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு ரிங் ரோடு (Coimbatore Western Ring road) அமைக்கும் பணி கடந்த 2024ம் ஆண்டு துவக்கப்பட்டது. மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டு வந்த பணி தற்போது நிறைவு…

Read More

கோவை உக்கடம் புதிய பஸ் ஸ்டாண்ட்: தமிழக முதல்வர் திறந்தார்

கோவை உக்கடம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இங்கே உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதி இடிக்கப்பட்டது. இதற்கு பதிலாக செல்வபுரம் பைபாஸ் ரோடு பகுதியில் இருந்த மீன் மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதி இடிக்கப்பட்டு 13 கோடி ரூபாய் செலவில் உக்கடம் முனையம் 1 என்ற பெயரில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நடந்தது. கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் செல்லும் வகையில் டவுன்…

Read More