அம்மா உணவகத்தில் சேர் இல்லை… உட்கார்ந்து தான் சாப்பிடுறோம்…

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் 30 பேர் சாப்பிடும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேபிள் மீது தட்டு வைத்து நின்றபடி தான் சாப்பிட முடியும். மேலும் டேபிள் உயரமாக இருப்பதால், சிறுவர்களுக்கு எட்டுவதில்லை. வயதானவர்கள், நோயாளிகள் இந்த டேபிளில் நின்ற படி சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு நாற்காலி வசதி செய்யவில்லை. இதனால் தரையில் அமர்ந்தபடி சாப்பிடும் நிலையிருக்கிறது. தரையில் உட்கார கூடாது என ஊழியர்கள் எச்சரிப்பதால், உணவு…

Read More

வியட்நாம் படகு விபத்தில் இறந்த 6 பேரின் சடலம் கோவை வந்தது

வியட்நாம் பூ குவேக் பகுதியில் உள்ள ஒரு தீவில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது. திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா , திருச்சி திருவானை கோயில் பகுதியை சேர்ந்த பாலாஜி, அன்பு நகரை சேர்ந்த அழகு ராஜன் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்து விட்டனர். இவர்கள் சடலம் விமான மூலமாக இன்று மதியம் கோவை வந்தது. கோவை…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் குட்டி மயிலை கடித்து கொன்ற நாய்கள்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவைத் துறை பயிற்சி வளாக கட்டடம் பின்புறம் புதர்கள் மண்டி கிடைக்கிறது. இன்று காலை மயில் ஒன்று தனது குட்டி மயிலுடன் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நாய்கள் கூட்டமாக மயில் மற்றும் குஞ்சு மயிலை படிப்பதற்காக விரட்டின. இதைப் பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாய்களை விரட்டி விட்டனர் . மேலும் குட்டி மயிலை பிடித்து பாதுகாக்க முயன்றனர் . ஆனால் அதற்குள் நாய்கள் கடித்ததில் குட்டி…

Read More

மதுக்கரையில் யானை தாக்கி விவசாயி சாவு…!

கோவை மதுக்கரை புதுப்பதி அருகே உள்ள சோளக்கரை வன எல்லை கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜ் (60) என்பவர் இன்று காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த யானை ஒன்று ஆவேசமாக நடராஜை தூக்கி வீசியது. அவரது காலில் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். யானை சென்றதும் அங்கே வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக…

Read More

விஜய் ஆட்சியில் 15 லட்சம் கோடி கடன் உருவாகும்… மாநாட்டில் அண்ணாமலை பேச்சு…

கோவை பொள்ளாச்சியில் போதை இல்லாத தமிழகம் என்ற பெயரில் வீ தி லீடர்ஸ் மாநாடு இன்று நடைபெற்றது இதில் அமைப்பின் தலைமை சேவகர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது இந்த அமைப்பில் யாருக்கும் பொறுப்பு தலைவர் எதுவும் கிடையாது . அனைவரும் தன்னார்வலர்கள் தான்.இந்த அமைப்பை ஆரம்பிக்கும் போதே நாம் 50 சதவீதம் தாண்டி விட்டோம் மாணவர்கள் இங்கே உறுதிமொழி எடுத்தார்கள் போதைக்கு எதிராக நாம் இறங்கி வேலை செய்ய வேண்டும் இங்கே உறுதிமொழி எடுத்த மாணவர்…

Read More

கையேந்தும் சிறார்களை கரையேற்ற ஆளில்லை…

கோவை நகர், புறநகரில் ரோட்டோரம் சிலர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சிறார்களை வைத்து பிச்சை எடுக்க கூடாது. அப்படி செய்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்ய சட்டம் இருக்கிறது. இதற்காக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் மூலமாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் நகர், புறநகரில் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகமாகி விட்டது. வடமாநிலங்களில் இருந்து சிலர் கோவை வந்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர்….

Read More

கோவை மாநகராட்சியில் குடிநீர் பஞ்சம் தீருமா…!?

கோவை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் வழங்க அதிக நாட்கள் காத்திருக்க வைப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பில்லூர் 1, 3 திட்டம், சிறுவாணி, ஆழியாறு, அமராவதி, பவானி, பேரூர் கூட்டு குடிநீர், வடவள்ளி வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குனியமுத்தூர் கிணத்துக்கடவு குடிநீர் திட்டம் என 13 குடிநீர் திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டிற்கு முன் ஒருங்கிணைந்த கூட்டு…

Read More

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகள் ஆரம்பிக்க தடை…

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகள் நடத்த கடும் தடை நீடிக்கிறது. செங்கல் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருந்த கோவையில் ஒரே ஒரு செங்கல் சூளை தான் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் செம்மண் வளம் மிகுதியாக காணப்படுகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், எட்டிமடை பகுதியில் செம்மண் பூமி காணப்படுகிறது. கடந்த காலங்களில் இங்கே செங்கல் சூளைகள் அதிகமாக காணப்பட்டது. தடாகம் பகுதியில் 187 செங்கல் சூளைகள் இயங்கியது. முறைகேடாக…

Read More

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பணி வரும் 17ம் தேதி துவக்கம்

கணக்கெடுப்பு தொடர்பாக கலெக்டர் பவன் குமார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் 1ம் தேதி துவக்கப்படும். இதற்கு முன்னோட்டமாக வரும் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு பணி என்பது பொதுமக்கள் தங்கள் செல்போனில் https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் தங்களை பற்றி சுய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். மாநிலம் என்ற பகுதியில் தமிழ்நாடு என தேர்வு…

Read More

நடிகர் பாக்கியராஜுக்கு கோவையில் நினைவஞ்சலி… நடிகர் சிவகுமார், சுந்தர்ராஜன் உருக்கமான பேச்சு…

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்என்ஆர் அரங்கத்தில் மறைந்த சினிமா நடிகர், இயக்குநர் பாக்கியராஜ் நினைவு அஞ்சலி இன்று நடந்தது. இதில் நடிகர் சிவக்குமார். இயக்குநர் சுந்தர்ராஜன், பாக்கியராஜ் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு உள்ளிட்டோர் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் அண்ணாபூர்ணா குரூப் தலைவர் சீனிவாசன், முன்னாள் மேயர் பாலகிருஷ்ணன், ஆடிட்டர் கார்த்திகேயன், முன்னாள் லயன்ஸ் கிளப் இயக்குநர் ராமகிருஷ்ணமூர்த்தி, மனோகரன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடிகர்…

Read More