கோயில் நிலங்களை பட்டா போட்டு தரலாமா …நயினார் நாகேந்திரன் பேட்டி

கரூர் கோவில் நில விவகாரத்தில் ஆய்வு செய்து பாஜக போராட்டம் நடத்தும் என கோவையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: கோவை பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் 3,085 ஏக்கர் நிலம் தொடர்பாக அவசரமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின்…

Read More

அமைச்சர் சம்பத்குமார் உத்தரவு கோவை அரசு மருத்துவமனை எலிகளின் குழிகள் மூடல்…

கோவை அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு முன்பு எலிகள் கூட்டமாக சுற்றிக் கொண்டிருந்தன.மண்ணை தோண்டி பொந்து அமைத்து அதில் உணவுப் பொருட்களை பதிக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்குள் ஜாலியாக வலம் வந்தன இது தொடர்பாக நமது கோவை மெட்ரோ நியூஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளிவிடப்பட்டது. இந்த பதிவுகள் பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் நியூஸ் வெப்சைட்டிகளில் அதிக அளவு பகிரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் அரசு மருத்துவமனையில்…

Read More

ரேஷன் கார்டில் 3.97 லட்சம் விரல் ரேகை காணோம்…கோவையில் வீடு வீடாக சோதனை

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு பணி 95.03 சதவீதமும், முன்னுரிமை கார்டுகளில் 95.10 சதவீதமும் முன்னுரிமையற்ற கார்டுகள் 84.48 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா…

Read More

கோவை வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு…டான்சா ஒப்படைப்பு ரத்து

கோவையில் மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.8 கி.மீ தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு பணிகள் துவக்கப்பட்டது. பேஸ் 1. 2. 3 என மூன்று கட்டமாக பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்ட பணிகள் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 250 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் 2ம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரை பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது….

Read More

டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்…

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டாஸ்மாக் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை இன்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசை கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை…

Read More

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவி மர்ம சாவு :உறவினர்கள் புகார்…

விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம், வாசுகி தம்பதியர் மகள் தாரணிகா (18). இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் 2-ம் ஆண்டு பிஎஸ்சி அக்ரி படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்தார். நேற்று காலை விடுதி கழிவறைக்கு சென்ற தாரணிகா மீண்டும் வரவில்லை. மதியம் கழிவறையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அங்கே சென்று பார்த்த போது கழிவறையில் மர்மமான முறையில் தாரணிகா…

Read More

Coimbatore 4 battalion: எஸ்.பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!

கோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் 4வது பட்டாலியன் படை பிரிவு உள்ளது. இங்கே எஸ்.பி ஆக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (54), இவர் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து இங்கே பணியில் இருந்துள்ளார். இவர் சில மாதம் முன் பட்டாலியன் பெண் போலீசாருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஏட்டு தப்பி அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தார். போலீசார் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாகம் செந்தில்குமாரை கைது செய்தனர்….

Read More

கோவை மாவட்டத்தில் 4516 ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு…

கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டு கேட்டு நடப்பாண்டில் இதுவரை 12,231 பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியில்லாத 4516 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளது. 11,66,220 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. 34,29,650 பேர் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர். மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9.76 லட்சம் பாமாயில் பாக்கெட் போன்றவை ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு கேட்டு குடிமைப்பொருள்…

Read More

கோவை எட்டிமடை வனப்பகுதியில் திடீர் நிலச்சரிவு…!

கோலை மாவட்டம் மதுக்கரை வன சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை, சின்னாம்பதி,புதுப்பதி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது யானைகள், சிறுத்தைகள், மான்கள் காட்டெருமை குரங்குகள் அதிகம் உள்ள இந்த வனப்பகுதியில் சமீப நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இன்று மதியம் எட்டிமடை மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும் சத்தத்துடன் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. திடீரென சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல்…

Read More

உயிர் காக்கும் கடம்ப மரம்: கண்டுபிடிப்புக்குகாப்புரிமை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடம்ப மரத்திலிருந்து கடம்பின் என்ற மருத்துவ குணம் வாய்ந்த உயிர் வேதிப்பொருளை பிரித்தெடுக்கும் முறையை கண்டறிந்ததற்காக இந்திய அரசின் காப்புரிமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக காப்புரிமையை வழங்கியுள்ளது. நியோலாமார்க்கியா கடம்பாவிலிருந்து அதிக அளவு கடம்பினை ஈட்டுவதற்கு, பிரித்தெடுப்பதற்கு மற்றும் அளவிடுவதற்குமான புதிய முறை என்ற தலைப்பிலான இந்த கண்டுபிடிப்பை கோபால், செந்தில், வெள்ளைக்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது. தமிழ் சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பழப்பெரும்…

Read More