அம்மா உணவகத்தில் சேர் இல்லை… உட்கார்ந்து தான் சாப்பிடுறோம்…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் 30 பேர் சாப்பிடும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேபிள் மீது தட்டு வைத்து நின்றபடி தான் சாப்பிட முடியும். மேலும் டேபிள் உயரமாக இருப்பதால், சிறுவர்களுக்கு எட்டுவதில்லை. வயதானவர்கள், நோயாளிகள் இந்த டேபிளில் நின்ற படி சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு நாற்காலி வசதி செய்யவில்லை. இதனால் தரையில் அமர்ந்தபடி சாப்பிடும் நிலையிருக்கிறது. தரையில் உட்கார கூடாது என ஊழியர்கள் எச்சரிப்பதால், உணவு…
