காவலன் செயலி 45091 பேர் பதிவிறக்கம்…
மாநகரில் தனியாக வசிக்கும் முதியோர் பாதுகாப்பை உறுதிசெய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், 45,091 பேரை, எஸ்ஓஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். கோவை மாநகரில் தனியாக வசிக்கும் முதியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மாநகர போலீசார் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநகரில் தனிமையில் வசிக்கும் 990 முதியோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது முழுமையான விவரங்களை சேகரித்துள்ளனர். காவல்நிலையம் வாரியாக இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் முதியோர் பாதுகாப்பு நடவடிக்கையை…
