எஸ்எஸ் குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம்:7 பேர் மீது வழக்கு
கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடமும், வில்லங்க சான்று பெற வருபவர்களிடமும் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து இந்த அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி ராஜேஷ் தலைமையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 82,500 ரூபாய் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அடுத்தக்கட்ட…
