பேச மறுத்து சைகை கட்டிய அமைச்சர் ஆனந்த்…

தமிழக அமைச்சர் ஆனந்த் இன்று சென்னையிலிருந்து கோவை வந்தார்.

கோவை சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமாரின் மகன் திருமணத்திற்காக அமைச்சர் ஆனந்த் விமானம் மூலம் கோவை வந்தார் கோவை விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த பூங்கொத்துக்களையும் மிகவும் மரியாதையுடன் ஏற்றுக்கொண்ட ஆனந்த், ஒவ்வொரு தொண்டருக்கும் கை கொடுத்தபடியே வந்தார். இடையே, தவெக தொண்டர்கள்,”பொதுச்செயலாளர் வாழ்க” என்று கோஷங்களை எழுப்பினர்.

அப்போது வாய் மீது விரல் வைத்து காண்பித்து, அனைவரும் அமைதியாக இருக்குமாறு கூறினார். இதனைத்தொடர்ந்து தொண்டர்களை சந்தித்தவாறே வந்த ஆனந்த் ஊடகத்தினர் மைக் வைத்திருப்பதைப் பார்த்ததும், அங்கிருந்து விலகிச் சென்றார். நிருபர்கள் பலரும், மேட்டூர் அணை திறப்பு குறித்தும், முதல்வர் வருகை குறித்தும், செய்தியாளர்களை சந்திக்க ஏன் மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால், எதற்கும் செவிசாய்க்காத அமைச்சர் ஆனந்த் அங்கிருந்து தலை தெறிக்க அங்கிருந்து புறப்பட்டு காரில் ஏறிச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *