எஸ்பி வேலுமணி குறித்து ஓவர் கமெண்ட்… போலீசில் புகார்
கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது உதவியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் பரப்பி வருவதாக அதிமுக., வினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
புகார் அளித்த பின் அதிமுக.,வினர் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் வேலுமணி பற்றியும், அவரது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினரை பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். இது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
. இது போன்ற அவதூறுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்ற நோக்கில், நாங்கள் சட்டப்பூர்வமாக கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்துள்ளார்” என்றனர்.
