மருதமலை கோவில் உண்டியல் திறப்பு…

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிரந்தர உண்டியல் இன்று திறக்கப்பட்டது.

துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விமலா, ஆனைமலை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சுவாமிநாதன், பேரூர் சரக ஆய்வர் பவானி, கோவில் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

உண்டியலில் தங்கம் 50.05 கிராம் வெள்ளி 2 கிலோ 40 கிராமும் பித்தளை 35 கிலோ 600 கிராமும் கிடைத்தது.

நிரந்தர உண்டியலில் 72 லட்சத்து 37 ஆயிரத்து 355 ரூபாயும், கோசாலை உண்டியலில் 2,32,311 ரூபாயும் திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 773ம் ஆக மொத்தம் 76 லட்சத்து-ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக உண்டியல் மூலம் பெறப்பட்டது.

Please Find the attachment

One thought on “மருதமலை கோவில் உண்டியல் திறப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *