கோவை மாவட்டத்தில் 49 கொலை, 514 விபத்து சாவு…!

கோவை மாவட்டததில் கடந்த 2025ம் ஆண்டில் மொத்தம் 49 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடியிசம பழிவாங்கல் சமுதாயம், சாதி அல்லது அரசியல் காரணங்களால் எந்தக் கொலை வழக்குகளும் பதிவாகவில்லை. பதிவான கொலை வழக்குகளில் வாக்குவாதம் தொடர்பாக 13 கொலை, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 15 கொலை, பாலியல் காரணமாக 4 கொலை, குடும்பத தகராறில் 9 கொலை திருமணம் தாண்டிய உறவு தொடர்பாக 4 கொலை, காதல் விவகாரத்தில்…

Read More

ரூ.80 கோடி ரெடி பைபாஸ் ரோடு போட நிலம் வாங்க..

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் 3ம் கட்ட பணிக்காக 80 கோடி ரூபாய் நில ஆர்ஜித பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவக்கப்படும்.மாநில நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு சார்பில் மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் ரோடு பாலம் கட்டும் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது….

Read More

ஓட்டு மெஷினை எங்க வைக்கலாம்.. அதிகாரிகள் ஆய்வு. .

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3117 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 146 ஓட்டு சாவடிகள் அமைக்க, அதாவது 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கூடுதல் ஓட்டு சாவடிகள் தயார் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. ஓட்டுமெசின்கள் சரி பார்ப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடக்கிறது. இந்த நிலையில் மாவட்ட அளவில் ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை…

Read More

போன வருஷம் மழை கொஞ்சம் கம்மிதான்..

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பெய்வது வழக்கம் . தென்மேற்கு பருவமழை 198 மில்லி மீட்டர் பெய்திருக்க வேண்டும் ஆனால் 184 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது இதேபோல் வடகிழக்கு பருவமழை சராசரியை விட சற்று குறைவாக பெய்தது. ஒரு ஆண்டில் 728 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால்667 மில்லி மீட்டர் மழை பெய்தது. வழக்கத்தை விட 61 மில்லி…

Read More

கோவையில் 23 கொலை, 477 திருட்டு கொள்ளை..

கோவை நகரில் 2025 ஆம் ஆண்டில் 477 திருட்டு வழக்குகளில் 35 வழக்குகளில் குற்றவாளியில் பிடிபட்டனர். இதர 704 வழக்குகளில் 486 பேர் பிடிபட்டனர். ஒரு ஆண்டில் 23 கொலைகள் நடந்தது 25 கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 கற்பழிப்பு வழக்கு 28 துன்புறுத்தல் வழக்கு 201 பெண்கள் வன்கொடுமை சட்ட வழக்கு 58 விபச்சாரம் வழக்குகள் பதிவானது. போக்சோ என்ற சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக…

Read More

பஸ் சக்கரத்தில் தலை வைத்து விபரீத தற்கொலை

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு டவுன் பஸ்ஸில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த பஸ் வாளையார் நோக்கி புறப்பட்டபோது அங்கே பேண்ட் சர்ட் அணிந்திருந்த சுமார் 25 வயது வாலிபர் திடீரென பின் சக்கரத்தில் தலை வைத்து படுத்து விட்டார். பஸ்ஸின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரிக்கிறார்கள். பயணியில்…

Read More

32 வருஷமா கைவரிசை காட்டிய கில்லாடி கைது..

கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ஜெப மார்ட்டின் (45). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியை. கடந்த 24ம் தேதி இரவு ஜெப மார்ட்டினுக்கு அவரது உறவினர் ஒருவர் சாத்தான்குளத்தில் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் அன்று இரவு தனது மகள்களை அழைத்து கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு சென்றார். அங்கு துக்க நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு 26ம் தேதி காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு…

Read More

ரேஸ் கோர்ஸ் நியூ இயர் பார்ட்டிக்கு கட்டுப்பாடு

கோவை ரேஸ் கோர்ஸ் வாக்கிங் ஏரியா மற்றும் மீடியா டவர் பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதேபோல் ஆர் எஸ் புரம் ஸ்மார்ட் சிட்டி கிளாக் டவர் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் தினமும் அதிகமாக உள்ளது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரவு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கூட்டமாக குவிந்து பார்ட்டி கொண்டாட உள்ளனர். குறிப்பாக டான்ஸ் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடக்க உள்ளது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு…

Read More

துப்பாக்கியால் சுடப்பட்ட 3 கொள்ளையர்களுக்கு குண்டாஸ்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி3 பிளாக்கில் 10 வீடுகளிலும் கடந்த மாதம் நகை பணம் திருடப்பட்டது. இந்த வீடுகளில் திருட்டு நடந்த விவரம் அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டனர். இது தொடர்பான தகவல் அறிந்து கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்….

Read More

அதிக திட்டங்களை செய்தோம்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு..

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹாக்கி மைதானம் திறப்பு விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார். ரூ.31,72 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.162.52 கோடி மதிப்பீட்டில் 107 முடிவற்ற திட்டப்பணிகளை…

Read More