மோசடி நபரை போலீசார் விசாரிக்கலை… ஆதிவாசி பெண்கள் புகார்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் காரமடை கோபநாரி தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண்கள் முற்றுகையிட்டு குவிந்தனர். அப்போது அவர்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எங்களிடம் நட்பாக பழகினார். அவர் எங்களிடம் தனித்தனியாக பணம் நகை வாங்கினார். சில நாட்களில் திருப்பி தருவதாக கூறி அவர் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என பலரிடம் பணம், நகை வாங்கினார்….
