பொலிவுடன் தயாரானது கோவை குதிரை வண்டி கோர்ட்…!
கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலம் பகுதியில் குதிரை வண்டி கோர்ட் செயல்பட்டு வந்தது. கடந்த 1863ம் ஆண்டு கால கட்டடத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இந்த கோர்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, வஉசி சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பான வழக்குகளிலும் இந்த கோர்ட்டில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. பெருமை வாய்ந்த இந்த கோர்ட் முடக்கப்பட்டாலும் இடிக்கப்படாமல் அப்படியே பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ்…
