கனமழையால் கோவை குற்றாலம் மூடல்
தமிழக கடலோர பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் இன்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து…
