கோவையில் சைகையில் கொலை மிரட்டல்: இரண்டு பேருக்கு ஜாமீன் ரத்து

கோவை மகிளா கோர்ட்டில் கிணத்துக்கடவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடந்தது.

இதில் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மாரி செல்வம் (36), அவரது அண்ணன் ராம்குமார் (48) ஆகியோர் குற்றவாளிகளாக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் சாட்சிகளாக ஆஜரான புகார்தாரரான அரசம்பாளையம் ஸ்ரீதேவி மற்றும் கண்ணால் பார்த்த சாட்சி கவுசிக் ஆகியோரை நீதிமன்றத்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சைகை காட்டியதாக தெரிகிறது.

இதையறிந்த நீதிபதி சுந்தர்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட மாரி செல்வம், ராம்குமார் ஆகியோருக்கு வழக்கு விசாரணை முடியும் வரை ஜாமீன் ரத்து செய்தும், நீதிமன்ற காவலில் வைக்க பிடிவாரண்ட் வழங்கியும் உத்தரவிட்டார். இதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

One thought on “கோவையில் சைகையில் கொலை மிரட்டல்: இரண்டு பேருக்கு ஜாமீன் ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *