கோவையில் சாதனையாளர்கள் அறிவிப்பு பலகைகள் சாய்ந்தது

கோவை ஆர்எஸ் புரம் டி பி ரோடு பகுதியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை சீரமைப்பு பணிகள் செய்தது.கோவை

நகர் பகுதியில் குறிப்பாக ஆர் எஸ் புரம் பகுதியின் வளர்ச்சிக்காக செயல்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் கோவையின் பல்வேறு சேவைகளை செய்த சாதனையாளர்கள் தொடர்பான போட்டோக்கள் மற்றும் அவர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும்பாலான தகர அறிவிப்பு பலகைகள் பராமரிப்பு இல்லாமல் சாய்ந்து விழுந்து கிடக்கிறது.இவற்றை

மாநகராட்சியினர் கண்டு கொள்ளவில்லை. நடைபாதை பகுதியில் ஆக்கிரமிப்புகள் பல இடங்களில் காணப்படுகிறது. இவற்றை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிபி ரோடு, டிவிஎஸ் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் ஒதுக்கப்படவில்லை. மாநகராட்சி இடத்தை தனியார் அபகரித்து வருகின்றனர். இங்கே பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க மாநகராட்சியின் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *