கோவை மாவட்ட சட்ட மன்ற தேர்தலில் 90 கண்காணிப்பு படைகள் தயார்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படும். ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் என 14,252 பேர், ரிசர்வ் நிலையில் 150 பேர். இதர பணிகளில் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள். கோவை மாவட்ட அளவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படும் போது கண்காணிப்பு பணியில் ஈடுபட 90 சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது….

Read More

கோவை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு..!

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்.. கோவை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 22,000 பேர் வரை இருப்பதாக தெரியவந்துள்ளது . இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 14,500 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 85 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி தபால் ஓட்டு போட தகுதியான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஆய்வுப் பணி…

Read More

கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!

கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள்.. கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி கல்லூரி மாணவி தனது ஆண் நண்பரும் ஒருவருடன் நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. இந்த நிலையில் அங்கே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி (31), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21) மதுரை மாவட்டத்தை சேர்ந்த…

Read More

கோவையில் போட்டியிட கமலஹாசன் தலைமையில் ஆலோசனை…!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நீதி மையத்தின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் மற்றும் துணைத் தலைவர் மௌரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட சாத்தியம் உள்ள தொகுதிகள் குறித்து கட்சியினர் கருத்து கேட்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை கமலஹாசன் போட்டியிட்டார். இதில் சொற்ப வாக்கு…

Read More

கோவை பஸ் ஸ்டாண்டில் ரீல்ஸ்: அத்துமீறல் தொடர்பாக புகார்

கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்டாகிராம் ஆர்வலர் ஜித்து ஷாஜி என்பவர் பெண் வேடமிட்டு எனது நண்பர் ஒருவருடன் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளை இந்த ரீல்ஸில் அவர் காட்டியுள்ளதாக தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அத்துமீறி அனுமதி இன்றி இது போன்ற ரீல்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இரண்டாக பிரிப்பு: 2 உதவி இயக்குனர் நியமனம்

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகள் இருக்கிறது. இந்த ஊராட்சிகளின் நிர்வாகம் ஊராட்சி உதவி இயக்குனர் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு மற்றும் நிதி மேலாண்மை போன்றவை தணிக்கை உதவி இயக்குனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கோவை மாவட்ட ஊராட்சிகளின் நிர்வாகம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஊராட்சி உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் 12 ஒன்றியங்கள் என்றிருந்தது . இந்த நிலைமை மாறி இப்போது 6 ஒன்றியங்கள் 114 என மாற்றப்பட்டது. கோவை…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 99.15 லட்ச ரூபாயில் டிஆர்டிஒ ஆராய்ச்சி திட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு DRDO மூலம் ரூ.99.15 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆராய்ச்சி திட்டம் அங்கீகாரம் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (DRDO), நியூ டெல்லி நிறுவனத்தால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ஆராய்ச்சி திட்டம் ஒன்றிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. “Development of Novel Antidote(s) for Highly Toxic Organophosphorous Compounds” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆராய்ச்சி திட்டம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் DRDO Industry Academia – Centre of…

Read More

கோவை அப்பார்ட்மெண்டில் கை கால் கட்டி போட்டு மூதாட்டி கொலை..!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் இன்று காலை மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது . இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் . அவரது கழுத்து பகுதியில் காயம் இருந்தது . வாயில் துணி வைத்து அடைத்து…

Read More

கோவையில் ஜாலி வாக்கிங் வந்த யானை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தென்றல் நகர் பகுதியில் இன்று இரவு பெண் யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. குடியிருப்பு பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி இந்த யானை சுற்றியது. வீட்டின் முன்பு இருந்த வாழைமரம் மற்றும் தென்னை மரத்தின் மட்டைகளை சாய்த்து ருசித்து சாப்பிட்டது . பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டிய போது அதை கண்டு கண்டுகொள்ளாமல் யானை மெதுவாக வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்….

Read More

கோவையில் குப்பைக்கு போன 5.5 டன் குட்கா..!

கோவை காட்டூர் சாய்பாபா காலனி செல்வபுரம் துடியலூர் பீளமேடு கவுண்டம்பாளையம் கரும்பு கடை போலீஸ் ஸ்டேஷன்களில் கடந்த சில மாதங்களில் குட்கா பான்பராக் கணேஷ் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 43 வழக்குகளில் 5.5 டன் எடையிலான போதைப்பொருட்கள் கோவை மாநகர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த போதை பொருட்கள் அனைத்தும் இன்று வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 55 லட்சம்…

Read More