கோவை மாவட்டத்தில் 197 டாஸ்மாக் பார்கள் மூடல்

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தது. இவற்றில் கடந்த சில நாட்களுக்கு முன் 69 மதுபான கடைகள் மூடப்பட்டது. பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகேயுள்ள கடைகள் மூடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 229 மதுபான கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் மாநில அளவில் டாஸ்மாக் பார்களை மொத்தமாக மூடி சீல் வைக்க நேற்று மாலை உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி இன்று அனைத்து பார்களும் அதிரடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. கோவை வடக்கு கலால்…

Read More

பெட்ரோல் பங்க் அடாவடி அமைச்சர் சம்பத்குமார் எச்சரிக்கை அறிவிப்பு…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் அமைச்சர் சம்பத் குமாரின் உறவினர் எனக்கூறி பங்கு ஊழியரிடம் தகராறு செய்து தாக்கினார் இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய ராகவேந்திரா (35), ஜெயச்சந்திரன் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் கமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற அராஜக மற்றும்…

Read More

ஆவின் ஆப் வேண்டாம்… ஏஜென்டுகள் மறியல் போராட்டம்

கோவையில் ஆவின் செயலி பயன்பாட்டை கட்டாயப்படுத்தும் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தை கண்டித்து, ஆவின் முகவர்கள் தடாகம் ரோட்டில் உள்ள ஆர்எஸ்புரம் ஆவின் அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒன்றியம் ஆவின் முகவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகையை, நாளை முதல் தினமும் ஆவின் செயலி மூலமாகவே வழங்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால், தங்களுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு…

Read More

கோவையில் 4.3 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

கோவை நகரில் கஞ்சா கடத்தி விற்பதாக புகார் வந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மியான்டிட் மனோ தலைமையிலான போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில் சுங்கம் பகுதியில் சோதனை செய்தனர். கார் மற்றும் பைக்கில் வந்த 3 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது காரில் 4.3 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது. போலீசார் இவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்த மணிமாறன் (28), பிள்ளையார் புரம் பகுதியை சேர்ந்த நவரத்தினவேல்…

Read More

டாஸ்மாக் சரக்கு ஒரிஜினலா… புதுசா வந்தாச்சு ஹலோகிராம் ஸ்டிக்கர்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களில் போலியை கண்டறியும் வகையிலான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. மாநில அளவில் டாஸ்மாக் மதுபானங்களில் ஒட்டுவதற்கு புதிய ஒளிரும் தன்மை கொண்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. போலி மதுபானங்களை கண்டறிய உண்மையான மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலால் துணை கமிஷனர் சாதனை குரல் தலைமையில்…

Read More

மதுக்கரையில் கொல்லப்பட்ட பெண் யார்?விபச்சாரிகளிடம் போலீசார் விசாரணை

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெண் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த பெண்…

Read More

கோவை புதிய சிறை கட்ட ஏழை மக்களின் நிலங்கள் கையகப்படுத்த நோட்டீஸ்…

கோவை காந்திபுரத்தில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையை காரமடை பிளிச்சி பகுதிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே பிரமாண்டமான சிறை கட்டப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டில் பணி முடியும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிறை கட்ட அந்த பகுதியை சேர்ந்த சில ஏழை மக்களின் நிலம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக ஒன்னிபாளையம் ஜோதிமணி, பிரேமா உள்ளிட்ட சிலரின் நிலங்களை வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்து பெற…

Read More

உரிமைத்தொகை கேட்டு மகளிர் முற்றுகை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி தலைமையில் இன்று நடந்தது. இதில் சிங்காநல்லூர் போயர் வீதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (70) அளித்த மனுவில், “சிங்காநல்லூரில் உள்ள எனது நிலத்தில் பக்கத்து வீட்டு நபர் வீடு கட்டி வருகிறார். நான் கேட்ட போது, நான் அப்படி தான் கட்டுவேன், அதை யாரும் தடுக்க முடியாது எனக்கூறி மிரட்டினார். நான் போலீசில் புகார் அளித்த போது போலீசார் புகார்…

Read More

இலவச மனை பட்டா வீடு கேட்டு 764 பேர் மனு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், அம்பேத்கர் மக்கம் விடுதலை கழகம் தலைவர் ரங்கநாதன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “கீரணத்தம் ஆதிதிராவிடர் காலனியில் 15 ஆண்டிற்கும் மேலாக வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். மணியக்காரன்பாளையம் கக்கன் வீதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் புகார் கூறியும் குடிநீர் வழங்கவில்லை. கோவில்பாளையம் பகுதியில் 45 சி என்ற ஒரே ஒரு பஸ்தான் இயங்கி வருகிறது….

Read More

காம்பஸ், மயிர் கோதியால் மிரட்டி பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்த சைக்கோ…

கோவை மதுக்கரை மலைசாமி கோயில் வீதி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண்கள் இல்லாத வீட்டில் மர்ம நபர் ஒருவர் கதவைத் தட்டி புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம். பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த மர்ம நபர் அந்த…

Read More