கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் இளம் பெண் கற்பழித்து கொலை…!

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Read More

பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை…

கோவை அடுத்த ஆனைமலை தம்மம்பதி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2017ம் ஆண்டு சேத்துமடையை சேர்ந்த சரோஜினி(27) என்பவரை காதல் திருமணம் செய்தார் . ஒன்றரை ஆண்டுகள் கழித்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு சரோஜினி சேத்துமடையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மணிகண்டனும் அங்கு சென்று மாமனார் வீட்டிலேயே…

Read More

கோவையில் ஜமாபந்தியில் 10,000 விண்ணப்பங்கள் குவிந்தது…

கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம்தேதி துவங்கியது. மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடத்தப்பட்டது. கோவை வடக்கு தாலுகா தவிர அனைத்து தாலூகாவிலும் இன்றுடன் முகாம் நிறைவு பெற்றது. வடக்கு தாலூகாவில் வரும் 25ம் தேதி வரையில் முகாம் நடக்கவுள்ளது. பட்டா மாறுதல், பட்டா பிழை திருத்தம், சப் டிவிசன் செய்தல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, மகளிர் உரிமை…

Read More

Mins department: கோவையில் 100 குவாரிகளில் ட்ரோன் சர்வே நிறைவு…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக டிரோன் மூலமாக சர்வே பணி நடக்கிறது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம்…

Read More

மக்களை தேடி பணியாளர்களுக்கு சம்பளம் தரலை….

கோவை கலெக்டர் அலுவலகம் முன் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் பொது செயலாளர் மகாலட்சுமி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தில் சர்க்கரை நோய் பரிசோதனை, மருந்து பெட்டகம் வீடுகளுக்கு சென்று வழங்குதல் போன்ற பணியில் கடந்த 5 ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.5,500 ஊக்க தொகை அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். கடந்த அரசு பொறுப்பில் இருந்த போது நேஷனல் ஹெல்த்…

Read More

Avin app: முறைகேடு ஊழல்: ஆவின் முகவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்…

Chief reporter…கலைவாணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநகர் மாவட்ட தலைவர் லிங்கம் தலைமையில் ஆவின் முகவர்கள் நேற்று கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை ஆவின் பால் ஒன்றியத்தில் முகவர்கள் 700 பேர் மூலமாகவும். தயிர் 40 ஏஜென்சிகள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனுடைய வரவு செலவ சம்பந்தப்பட்ட பால் விற்பனை ஆர்டர்,பால்விற்பனை கமிஷன் தொகை மேலும் ஆவின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய…

Read More

மின்வாரியத்தில் லஞ்சம்: கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் …!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை கணபதி மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர்கள் அளித்த புகார் மனுவில், ” பயணிகள் ஆட்டோக்களில் சிலர் வணிக சரக்குகள் ஏற்றி செல்வதாக தெரியவந்துள்ளது. இதனால் சரக்கு ஆட்டோக்களின் வாடகை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும், விதிகளுக்கும் மாறாக இப்படி செய்வது அதிகமாகி விட்டது கேரளா மற்றும் கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் கோவையில் உள்ளூர் வாடகை அடிப்படையில்…

Read More

பெற்ற மகனை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை.. .

கோவையில் தங்கள் உறவுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவனை அடித்துக் கொடுமைப்படுத்திக் கொலை செய்த வழக்கில், தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பெற்ற தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை வடவள்ளி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (38). தனியார் மருத்துவமனை ஊழியரான இவருக்கும், திவ்யா (32) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி அபிஷேக்…

Read More

நீட் தேர்வு ரொம்ப கஷ்டம்… கோவையில் மாணவிகள் புலம்பல்…

கோவையில் இன்று நீட் மறுதேர்வு நடந்தது. இதில் 7,092 பேர் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மாவட்டத்தில் இதற்காக 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அரசு கலைக் கல்லூரி, எஸ்ஜிஆர் கல்லூரி, நிர்மலா கல்லூரி, பிஎஸ்ஜி கல்லூரி, கொங்குநாடு கல்லூரி, அவிநாசிலிங்கம் கலைக்கழகம் உள்ளிட்ட 15 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த மாதம் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்திற்கும் மற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர் கோவை மாவட்டத்தில் இந்த…

Read More

Coimbatore junction: வடக்கர்களுக்காக உருவாச்சு தனி ரூட்…

கோவை ரயில் நிலையத்தில் தாமஸ் கிளப் பகுதி வழியாக லக்கேஜ் கொண்டு செல்ல தனி பாதை உருவாக்கி இருப்பது பயணிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் தரக்கூடிய பிரதான ரயில் நிலையமாக கோவை இருக்கிறது ஆனால் கட்டமைப்பு, பிளாட்பாரம், பார்க்கிங், பயணிகள் வசதிகளில் கோவை ரயில் நிலையம் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. பிளாட்பாரங்களில் ரயில் நகர்ந்தால் தான் அடுத்து ரயில் வந்து நிறுத்த முடியும் என்கிற பரிதாப நிலைமை தொடர்கிறது. ரயில்…

Read More