கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலையா..? இந்து முன்னணி கடும் எதிர்ப்பு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில்மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ்,இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டு இன்று புகார் மனு அளித்தனர்.இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது மகாத்மா காந்தியின் நினைவாக காந்திபுரம் என காட்டூர் பகுதி அழைக்கப்பட்டது .காந்திபுரத்தில் நஞ்சப்பா ரோட்டில் இருந்து பாரதியார் ரோட்டுக்கு செல்லும் வழியில் லட்சுமி மில்ஸ் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு மார்பளவு ராஜாஜி சிலையை நிறுவியது. அவரது நினைவு நாள் அன்று அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாலை…

Read More

கோவையில் வாலிபர் கையை கட்டி குளத்தில் வீசி கொலை..!

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் இன்று சடலம் ஒன்று மிதந்தது. அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர் . இறந்த நபருக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம். அவரின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் அந்த நபரை தாக்கி கைகளை கட்டி தண்ணீரில் தூக்கி வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது. உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இருந்து அந்த…

Read More

கோவையில் போலி போன் பே மூலமாக மோசடி: மாணவர் கைது

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள ஒரு செல்ல பிராணிகள் விற்பனை கடையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கௌதம் (20) தனது நண்பர் ஒருவருடன் சென்றார். கடையில் அவர்கள் 5300 ரூபாய் மதிப்பில் பூனைக்குட்டி ஒன்று வாங்கினார்கள். அதற்கு போன் பே மூலமாக பணம் செலுத்தியதாக கடை உரிமையாளர்களிடம் ஆதாரம் காட்டினர். அப்போது கடை உரிமையாளர் தனது அக்கவுண்டில் பணம் வந்து சேரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு…

Read More

கோவை மாவட்டத்தில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு துவக்கம்..

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் நாளை துவங்குகிறது.வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மார்ச் 2ல் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது. கோவை 5 மாவட்டத்தில் 130 மையங்களில் தேர்வு நடக்கிறது. ஒரு அறைக்கு 20 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 37 வழித்தடங்களும்…

Read More

தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய்..!

கோவையில் வலம் வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்… தமிழகத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம், பரவல் கட்டுப்படுத்தப்பட ப்படவில்லை. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ளவர்களின் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு வருவதாக எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் புகார் கூறி வருகின்றனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் எச்.ஐ.வி தொற்று சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரின…

Read More

கோவையில் மாணவர் அறைகளில் ரெய்டு: கஞ்சா, மெத்தபெட்டமைன் சிக்கியது

செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதை பொருட்கள் டிஸ்ப்ளே.. கோவை மாவட்டத்தில் மதுக்கரை செட்டிபாளையம், எட்டிமடை மலுமிச்சம்பட்டி ,ஒத்தக்கால் மண்டபம், சூலூர் , நீலாம்பூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. CASO(cardon and search operation) என்ற பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் 4.5 கிலோ கஞ்சா 10 கிராம் மெத்தபெட்டமின் , 2.5 கிலோ கஞ்சா…

Read More

‘வீட்டு சாப்பாடு போர்’..கோவையில் அதிகரிக்கும் ஓட்டல்கள்..!

கோட்டைமேடு புட் ஸ்டிரீட். ‌.. கோவை மாவட்டத்தில் பம்பு, கிரைண்டர், மோட்டார். ஆட்டோமொபைல், ஜவுளி உட்பட பல்வேறு வகையான தொழில்கள் அதிகமாக இருக்கிறது. சமீப காலமாக ஹோட்டல் தொழில்கள் மாவட்ட அளவில் பரவலாக அதிகமாகி வருகிறது. குறிப்பாக இரவில் செயல்படும் ஹோட்டல்கள் அதிகமாகிவிட்டது இதற்காக பிரதான ரோடுகள் முக்கிய பகுதிகளில் ஹோட்டல் தொழிலுக்கு ஏற்ற கட்டுமானங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது ஓட்டல் தொழில் பல மடங்கு அதிகமாகி விட்டதாக இந்த…

Read More

கோவையில் மேஸ்திரி கள்ளக்காதலியுடன் ஓட்டம்: மனைவி புகார்

கோவை சிங்காநல்லூர் நீலி கோணம் பாளையம் பகுதியை சேர்ந்த 38 வயதான கட்டிட மேஸ்திரி ஒருவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மேஸ்திரிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது . தனது மனைவியை மற்றும் குழந்தைகளின் நகை மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து அதனை கள்ளக்காதலிக்கு செலவு செய்து அவர் ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் இவரது மனைவி வீட்டில் இருந்த பொருட்களை…

Read More

கோவை மதுக்கரையில் யானைகள் நடமாட்டம் கண்டறிய ட்ரோன் கண்காணிப்பு பிரிவு

கோவை மதுக்கரை வனப்பகுதியில்வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு இன்று திறக்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இந்த பிரிவை துவக்கி வைத்தார். இதில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுக்கரை வனப்பகுதி ரயில் பாதைகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க, வனத்துறை ஏ ஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்தியது. தமிழ்நாடு ஆளில்லா வான்வழி…

Read More

கோவையில் தோட்டக்கலையில் 9105 பேருக்கு மானியம்

கோவை மாவட்டத்தில் சின்னத்தடாகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பசுமை குடிலில் ஜெர்பரா மலர் சாகுபடி நடக்கிறது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு செய்தார் . தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், 40 சதவித மானியத்தில் தோட்டக்கனை’ பாயிர்கள் பரப்பு அதிகரித்தல், வாழைத்தார் பாதுகாப்பு உறை வழங்குதல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல் , நிழல் வலை கூடாரம், நிலப்போர்வை…

Read More