தமிழக முதல்வர் நாளை கோவை வருகை; 3000 போலீஸ் பாதுகாப்பு..!

கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள் கூட்ட அரங்கம் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வரவுள்ளார். கோவை விமான நிலைய வளாகத்தில் கட்சியினர், பொதுமக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து முதல்வர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். இந்த நூலகம் கட்டுமான பணிகள் 7 தளங்களில் நடக்கிறது…

Read More

கோவையில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை..!

தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் குமார் என்கிற மாரிமுத்து (40. இவரது மனைவி கற்பகவள்ளி(35). குமாரின் நண்பருக்கும், கற்பகவள்ளிக்கும் தகாதபழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து குமார் கண்டித்தார். இந்த நிலையில் கற்பகவள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் கணவருடன் விட்டு விட்டு, அந்த நபருடன் சென்றுவிட்டார். இருவரும் கோவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள சோலக்காட்டுப்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கணவர் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். மனைவியை குமார் பல்வேறு பகுதியில் தேடினார். அவரின் இருப்பிடம் தெரியவந்த நிலையில் அவர் கருமத்தம்பட்டிக்கு…

Read More

கோவையில் வருவாய்த்துறையினர் 2வது நாளாக போராட்டம்..

வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக நடந்தது. இதில் பேசிய நிர்வாகிகள், நாம் மிகவும் கஷ்டப்பட்டு பணி செய்கிறோம். அனைத்து பாதிப்புகளும் நமக்கு தான் வருகிறது. நம் உயர் அதிகாரிகள் சொகுசான காரில் வருகிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய…

Read More

திமுக கூட்டணியில் நாளை பேச்சு வார்த்தை:கொமதேக ஈஸ்வரன் தகவல்..

கோவை கொடிசியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, “திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொகுதி பேச்சுவார்த்தைக்காக நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை அங்கு செல்கிறோம். அதிக கட்சிகள் இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கான சீட்கள் குறையும் என்று தகவல்கள் வெளியானது குறித்த கேள்விக்கு, “திமுகவினர் அவ்வாறு கூறியது போன்று தெரியவில்லை. எவ்வளவு தொகுதிகள் கேட்போம் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டு அறிவிக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி…

Read More

கோவையில் 450 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள்..!?

கோவை மாவட்டத்தில் 3567 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை போலீசார் வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஒட்டு பதிவு…

Read More

கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பீதியில் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு..!

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு (பைல் படம்) கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான இமெயில் இன்று மதியம் வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததும் பதறிப்போன பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்று தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். கடந்த…

Read More

கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் கார் கவிந்தது..

ஹோம் காலேஜ் பகுதியில் தலைகீழாக கிடக்கும் கார்.. கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் பகுதியில் இன்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த இரண்டு பேர் காயமடைந்தனர்‌. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டதா டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்…

Read More

மனைவி பிரிவு ,போதை கொடுமை கோவை வாலிபர் தற்கொலை..!

கோவைவெள்ளலூர் அருகே உள்ள சக்தி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அபினந்த் ( 43). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் அபினந்த் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் இருப்பவர்கள் அவரது சகோதரர் எழிலனுக்கு தகவல் தெரிவித்தனர். போத்தனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அபினந்த் இருந்த வீட்டு கதவு…

Read More

கோவையில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை..!

கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையம், பொன்விழா நகரை சேர்ந்தவர் நந்தகோபால் ( 40). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.நேற்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி உடன் வெளியே சென்று விட்டார். அதன் பிறகு நந்தகோபாலின் மனைவி வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் இருந்த ஏராளமான சில்வர் பொருட்கள் மற்றும் தங்கத்தட்டு மற்றும் பணம் ரூ.50,000 ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.  இது குறித்து…

Read More

மூலப் பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது: மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தகவல்

கோவை விமான நிலையத்தில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி நிருபர்களிடம் கூறியதாவது; இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் பங்களிப்பு 33.31 சதவீதமாக உள்ளதாகவும். நாட்டின் உற்பத்தித் துறையில் 36 சதவீத பங்கையும் மொத்த ஏற்றுமதியில் 46 சதவீத பங்கையும் இத்துறை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் வலிமை அதன் ஏற்றுமதி அளவை வைத்தே கணக்கிடப்படும் நிலையில்,…

Read More