கோவையில் முதியோர்களுக்கு டார்ச்சர்: 2 காப்பக வார்டன் மீது நடவடிக்கை…

கோவை மாவட்டத்தில் 319 மகளிர் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பு, தரமான உணவு, அடிப்படை வசதிகள் உள்ளதா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி கண்காணிப்பு பணி நடத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் உரிய நேரத்திற்குள் விடுதிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகவல் தெரிவிக்காமல் மகளிர் விடுதியை விட்டு…

Read More

கோவையில் சுமார் 50 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க திட்டம்…!

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகள் தொடர்பாக கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பில் ட்ரோன் சர்வே நடத்தப்பட்டு வருகிறது . கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்டு வரும் இந்த சர்வே மூலமாக கனிம வள கொள்ளை மற்றும் முறைகேடுகளை கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் 160 கல்குவாரிகள் இருக்கிறது. இதில் 20 கல்குவாரிகளில் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சி காலத்தில் ட்ரோன் சர்வே ஆய்வு நடத்தப்பட்டது . தற்போது 140 கல்குவாரிகளில் ஆய்வு நடந்த…

Read More

கஞ்சி சோறு, தண்ணி குழம்பு… அம்மா உணவகத்தில் அவலம்…!

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 15 அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது .‌ கோவை அரசு மருத்துவமனை வளாகம், காந்திபுரம், உக்கடம் , குனியமுத்தூர் , சிங்காநல்லூர் பீளமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவகங்கள் பழுதடைந்து அசுத்தமாக காணப்படுவதாக புகார் இருந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையினர் ஆய்வு நடத்தி அம்மா உணவகங்களை சீரமைக்க டெண்டர் விட்டு பணிகளை துவக்கி…

Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம் மூடல்…!

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக மழை பெய்து வருகிறது .சிறுவாணி சின்ன கல்லாறு சோலை ஆறு உடுமலை திருமூர்த்தி மலை பிஏபி பில்லூர் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. சிறுவாணி அடிவார வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. அருவி மற்றும் ஓடையில் நீர்வரத்து உச்சத்தை எட்டியுள்ளது . ஓடையில்…

Read More

டெட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால் எழுதியவர்கள் திணறல்…

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பிரத்யேக ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட் தேர்வு) இன்று பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 2.29 லட்சம் பேர் எழுதுகின்றனர். கோவையில் 8 மையங்களில் 2230 பேர் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10 மணிக்குத் துவங்கிய ‘தாள்-1’ தேர்வுக்காக, காலை 8 மணி முதலே தேர்வு மையங்களின் முன்பு…

Read More

கோவையில் கஞ்சா, ஆயில், LSD stamps, போதை மாத்திரை பதுக்கிய 10 பேர் கைது

கோவை மதுக்கரை கோவில்பாளையம் கிணத்துக்கடவு செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போதை பொருள் ஒழிப்பதற்காக மாவட்ட போலீசார் இன்று தீவிர ஒருங்கிணைந்த சோதனையில் ஈடுபட்டனர் . உள்ளூர் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர் . 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் 20.040 கிலோ கஞ்சா, உயர்க போதைப்பொருட்களான ( Synthetic drugs)கஞ்சா ஆயில் (Cannabis Oil), போதை மாத்திரை (Methamphetamine) போதை பேப்பர் ( LSD Stamp), பறிமுதல் செய்யப்பட்டது….

Read More

12 கடைகளில் ஷட்டர் லாக் உடைத்து கொள்ளை: கோவையை பதற வைத்த 2 பேர் கைது…!

கோவை அன்னூர் பகுதியில் உள்ள 12 கடைகளின் ஷட்டர் லாக் உடைத்து பணம் மற்றும் பல்வேறு பொருட்களை திருடி சென்றதாக புகார் பெறப்பட்டது. கொள்ளை நடந்த வணிக வளாக பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் இரண்டு திருடர்கள் முகத்தை மூடி குல்லா அணிந்து பூட்டை உடைத்து திருடிய காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சில இடங்களில் திருடர்களின் முகம் தெளிவாக தெரிய வந்தது. அதை…

Read More

வீட்டு வசதி வாரியத்தில் இனி ஆன்லைன் டெண்டர் : அமைச்சர் ராஜ்குமார் தகவல்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வீட்டு வசதி வாரிய தலைமைப் பொறியாளர் சரவணன், மேற்பார்வை பொறியாளர் ரங்கநாதன், செயற்பொறியாளர் ஜேக்கப் நாயகம், வெங்கடேஷ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமரன், நிர்வாகப்…

Read More

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே விரைவில் நிறைவு…

கோவை மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும்…

Read More

சிறுவாணி அணைப்பகுதியில் கனமழை: நீர்மட்டம் உயர்வு

சிறுவாணி அணை நீர்மட்டம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடி தற்போது அணையின் நீர்மட்டம் 8.96 அடியாக இருக்கிறது. அணையிலிருந்து தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 45 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று 16 மில்லி மீட்டர் மழையும், அதற்கு…

Read More