Apartment incident: கோவையில் 13 வது மாடியில் இருந்து விழுந்தவர் சாவு…

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சாஜன் குமார் அகர்வால் (65). இவர் கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார். இவருடன் இவரது மகன் ராகுல் அகர்வால் மற்றும் குடும்பத்தினரும் அதே குடியிருப்பின் 13-வது மாடியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சாஜன் குமார் அகர்வால் தனது வீட்டில் உள்ள ஜன்னல் அருகே நாற்காலி ஒன்றின் மீது…

Read More

கோவையில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகை திருட்டு…

கோவை வீரகேரளம் அருகே உள்ள சிறுவாணி ரோடு ஆலமரத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (44). தனியார் நிறுவன ஊழியர் . இவர் மனைவி கடந்த மே 27ம் தேதி, 7 பவுன் தங்க நகைகளை படுக்கையறையில் உள்ள மர பீரோவில் பத்திரமாக வைத்துள்ளார். மறுநாள் (28ம் தேதி) ஆனைகட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜேஷ், குடும்பத்தினர் உடன் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், 29ம் தேதி மாலை அவர்கள் வீடு…

Read More

Covai highway: ரோடு பாலம் பணிகள் ரொம்ப லேட்…

கோவை மாவட்டத்தில் ரோடு, பாலம் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. கேட்க ஆளில்லாத நிலையில், ஹைவேஸ் துறையில் முறைகேடு அதிகமாகி விட்டது. கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் குரும்பபாளையம் ரோடு அகலமாக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி துவக்கப்பட்டது. இந்த பணி வரும் ஜூலை 72ம் தேதி முடிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 60 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் 40 சதவீத பணிகள் முடிய மேலும் 6 மாதமாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கனூர்…

Read More

கிலோ மீட்டருக்கு 18 ரூவா… கோவையில் கிக் தொழிலாளர்கள் போராட்டம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆன்லைன் மூலம் உணவு மளிகை மருந்து உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் கிக் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏ ஐ டி யு சி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிக் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது. இது ஸ்விக்கி, ஜொமேடோ, இன்ஸ்டா மார்ட் போன்ற கம்பெனிகள் இணையதளங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும்,…

Read More

கோவையில் கிரஷர், குவாரிகள் நல சங்கம் சார்பில் 28 ஏக்கரில் மரக்கன்று நடவு…!

கிரசர் மற்றும் குவாரிகள் நல சங்கம் சார்பில் கோவையில் 28 ஏக்கரில் மரக்கன்று நடவு பணி துவக்கம் கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை, கோயம்புத்தூர் மாவட்ட கிரசர் மற்றும் குவாரிகள் நல சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா இன்று நடந்தது. செட்டிபாளையம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்று நடும் பணி தொடங்கியது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கோவை…

Read More

Dvac ride: கோவையில் 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கிறது. இந்த அலுவலகங்களில் பணியாற்றும் சில சார்பதிவாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது ஓரிரு நாளில் அதிகாரிகள் புதிய இடங்களில் பதவி ஏற்க உள்ள நிலையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ சார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை காந்திபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. பத்திரம் பதிவு…

Read More

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா: ரெய்டு நடத்துமா என்ஐபி…!?

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாளையார் சின்னம்பதி பாரப்பட்டி நரசிபுரம் மாங்கரை ஆனைகட்டி தோலம்பாளையம் சிறுமுகை மேட்டுப்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனங்களில் கஞ்சா சாகுபடி நடக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது. மலைப்பகுதியில் கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் இருப்பதாக தெரிகிறது. இங்கே ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்ப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 30 முதல் 50 டன் எடையில் விதை நீக்கப்பட்ட உலர்ந்த தரம் பிரித்த கஞ்சா சேகரிக்கப்பட்டு வருவதாகவும்,…

Read More

கொடூரமாக கொலை செய்தது எப்படி… Coimbatore minor girl வழக்கில் போலீசார் கஷ்டடி விசாரணை…!

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைப்புச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய…

Read More

ladies hostel: கோவையில் உரிமம், பாதுகாப்பற்ற மகளிர் தங்கும் விடுதிகளை மூட உத்தரவு…

கோவை மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள், அரசு, தன்னார்வ மத தொண்டு நிறுவனங்கள் தொழிற்சாலை நிறுவனங்கள், தனியார் மற்றும் அமைப்புகள் நடத்தும் வீட்டைவிட்டு வெளியே தங்கும் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் (TamilNadu Hostels and Homes for Women and children Regulation Act 2014) படி பதிவு செய்ய வேண்டும். மேலும் போதிய இடவசதியுடன் சுற்றுப்புற சுகாதாரத்துடன், உள்ளுறைவோர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும். உரிய…

Read More

ரியல் எஸ்டேட் பிரமுகரை மிரட்டி நகை பறித்த ‘மாயா குரூப்’ கைது

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்‌ . இவரிடம் ரத்தினபுரியை சேர்ந்த பேபி என்கிற மாயா (23 ) என்பவர் நிலம் வாங்குவதற்காக தொடர்பு கொண்டு பேசினார் . அப்போது சிவகுமார் பன்னிமடையில் இடம் இருப்பதாக கூறி அவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார் . அங்கே மனை இடத்தை காட்டியுள்ளார் . அப்போது மாயா தனக்கு இடம் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து…

Read More