ஈஷாவில் மகா சிவராத்திரி விழா

கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா யோக மையத்தில் ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி விழா இன்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ஆதியோகி சிலை முன்பு லேசர் ஷோ மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களை சேர்ந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில்…

Read More

கோவையில் போதை கும்பல் தாக்குதல் ; 3 பேர் காயம்

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே எம் டி எஸ் பேக்கரி உள்ளது. இந்தப் பகுதியில் கஞ்சா மற்றும் போதை கும்பல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பேக்கரி அருகே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர் . அப்போது போதையில் வந்த ஒரு கும்பல் அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொடூரமாக தாக்கியது. இதில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ், மார்ட்டின், போஸ் ஆகியோர் காயமடைந்தனர் ….

Read More

சிறுவாணி அணை நீர்மட்டம் 50 சதவீதம் சரிவு குடிநீர் பற்றாக்குறை அபாயம்.. !

கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர், கோவை மாநகராட்சி மற்றும் 22 வழியோரகிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அணையின் உச்ச பட்ச நீர் மட்டம் 50 அடி. இதில் 44,61 அடி வரை நீர் தேக்க பராமரிப்பு பணி நடத்தும் கேரள நீர் பாசனத்துறை அணுமதி வழங்கியுள்ளது. உச்ச அளவை எட்டும் முன் அணையில் இருந்து எந்த முன் அனுமதியும் இன்றி தண்ணீர் திறந்து விடுவது வாடிக்கையாக நடக்கிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 25.22 அடியாக இருந்தது. குடிநீர்…

Read More

கோவை வெள்ளிங்கிரி மலை மகா சிவராத்திரி விழா;1 லட்சம் பேர் சுவாமி தரிசனம்..!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பூண்டி வெள்ளிங்கிரி மலை கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ஏழுமலை ஏறி கிரிமலை ஆண்டவர் தரிசனம் செய்தனர். குறிப்பாக காலை நேரத்தில் சூரிய உதயத்தை மலை உச்சியில் இருந்து காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு மலைக்கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் மூங்கில் குச்சி உதவியுடன் கடும் வெயிலில் மலையேறி வெகு…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக எஸ்ஐஆர் பார்வையாளர் ஆய்வு..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்ஐஆர் )தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் , கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணியின் போது கடந்த சில ஆண்டுகளில் இறந்த மற்றும் முகவரி மாறி சென்ற 6.5 லட்சம்…

Read More

கோவை மாவட்டத்தில் ஹாகா கிராமங்களில் மனை இடங்களுக்கு அனுமதி தாமதம்

கோவை மாவட்டத்தில் நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டணம், தேவராயபுரம், களிக்க நாயக்கன்பாளையம். இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம். பேரூர் செட்டிபாளையம் சுண்டக்காமுத்தூர் எட்டிமடை, மாவுத்தம்பதி தொண்டாமுத்தூர் நாயக்கன்பாளையம், கூடலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் போன்ற 23 கிராமங்கள் ஹாகா என அழைக்கப்படும் மலையிட பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வீடு கட்டடங்கள் கட்ட உள்ளூர் திட்டகுழுமத்தின் அனுமதி வழங்கப்படுவதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகள் எந்த வித…

Read More

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும்.. அமைச்சர் கோவி செழியன் பேட்டி..

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை,திருப்பூர் கரூர் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது . இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கோவை மண்டல திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செந்தில் பாலாஜி தலைமையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது; திமுக எம்பி…

Read More

கோவை மேற்குப் பைபாஸ் ரோட்டில் ரூ 2.40 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்..

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் கோவை மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. அடுத்த வாரம் திறப்பு விழா நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அறிவொளி நகர் பகுதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் நேற்று சரக்கு ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோ மோதியது . இதில் 22 வயதான கல்லூரி மாணவி உடல் நசுங்கி இறந்து விட்டார். மேலும் நான்கு பேர்…

Read More

கோவை அரசு பள்ளியில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்களால் பரபரப்பு..

கோவை சர்க்கார் சாம குளம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சியில் தொட்டிபாளையம் அரசு பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தினமும் கழிவறை சுத்தம் செய்ய வைப்பதாக புகார் இருந்தது. மாணவர்கள் இந்த விஷயத்தை தங்களது பெற்றோர்களிடம் கூறி பள்ளிக்கு செல்ல மாட்டோம் என புலம்பி உள்ளனர். இந்த நிலையில் இன்று பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஆசிரியை முன்பு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விஷயத்தை பயம் கலந்த தயக்கத்துடன் கூறினர்…

Read More

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் விபத்து; மாணவி சாவு பொதுமக்கள் மறியல்..!

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை புதிதாக பைபாஸ் ரோடு போடப்பட்டது . மேற்கு பைபாஸ் என அழைக்கப்படும் இந்த ரோட்டில் இன்னும் முறையான போக்குவரத்து துவக்கப்படவில்லை. இருப்பினும் மதுக்கரையிலிருந்து கோவைப்புதூர் சுண்டக்காமுத்தூர் பேரூர் பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இன்று ஆட்டோ ஒன்று ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் காயமடைந்தனர் . ஆபத்தான நிலையில் மூன்று பேர்…

Read More