இலவச மனை பட்டா வீடு கேட்டு 764 பேர் மனு…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், அம்பேத்கர் மக்கம் விடுதலை கழகம் தலைவர் ரங்கநாதன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “கீரணத்தம் ஆதிதிராவிடர் காலனியில் 15 ஆண்டிற்கும் மேலாக வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். மணியக்காரன்பாளையம் கக்கன் வீதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் புகார் கூறியும் குடிநீர் வழங்கவில்லை. கோவில்பாளையம் பகுதியில் 45 சி என்ற ஒரே ஒரு பஸ்தான் இயங்கி வருகிறது….
