ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அமலானது…

கோவை மாவட்டத்திவ் 18 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவாகிறது,

பத்திரப்பதிவிற்கு ‘ஸ்டார் 2.0’ சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. பதிவு பணிகளை வேகப்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, ‘ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட ‘கிளவுட் கம்யூட்டிங்’ சாப்ட்வேர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், வீட்டில் இருந்தே ஆவணங்கள் தாக்கல்செய்து பதிவுகளை செய்யலாம். பயனர் ஐடி மூலமாக பொதுமக்கள் பத்திரப்பதிவுகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று அனைத்து அலுவலகங்களிலும் ஆன்லைன் முறையில் வீட்டில் இருந்து பத்திரப்பதிவு செய்வது அரிதாக இருந்தது. சில அலுவலகங்களில் ? முதல் 5 பத்திரங்கள் மட்டுமே ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுவும். சொத்து ஆவண பதிவு இல்லாமல் சொத்து ஒப்பந்தம் (எம்ஓடி) தொடர்பாகவே பதிவுசெய்யப்பட்டது. இத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தினாலும், ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் பணிகள் தாமதமாகி வருகிறது.”இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறோம் போகப் போக இடர்பாடுகள் சரி செய்யப்படும். படிப்படியாக வீட்டில் இருந்தே பதிவுசெய்யும் பணிகள் அதிகரிக்கப்படும்” என பதிவுத்துறை அதிகாரிகள் கூறினர்.

4 thoughts on “ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அமலானது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *