கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் இளம் பெண் கற்பழித்து கொலை…!

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது.

சுமார் 20 முதல் 23 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண் பயன்படுத்திய ஒரு ஜோடி செருப்புகள் கண்டறியப்பட்டது.

இந்த செருப்பை வைத்து அந்தப் பெண் யார் என போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்கள் மற்றும் வெளியூரில் இருந்து கோவையில் தங்கி வேலை செய்யும் இளம்பெண்கள் குறித்து தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே மதுக்கரை கோவை புதூர் பைபாஸ் ரோடு பகுதியில் இரவு நேரத்தில் இளம் பெண்களுடன் சிலர் வலம் வருவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் பைபாஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி பெண்களுடன் அத்து மீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .இது தொடர்பாக போலீசுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இளம்பின் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

One thought on “கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் இளம் பெண் கற்பழித்து கொலை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *