K. V

எஸ்பி வேலுமணி, செந்தில் பாலாஜி தேர்தல் செலவு கணக்கு தாக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்தது. வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த நிலையில் மாவட்ட அளவில் தேர்தலில் போட்டியிட்ட குறிப்பாக 10 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை நான்கு நாட்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்களின் செலவு கணக்குகள் பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 183…

Read More

காலி மது பாட்டில் வாங்க மாட்டோம்… டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் கடந்த 1.04.2023ம் தேதி முதல் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து நிர்வாகத்திற்கு பலமுறை சுட்டி காட்டியும், தீர்வு காணாமல் டாஸ்மாக் நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பிளமேடு மண்டல டாஸ்மாக் அலுவலகம் முன் நேற்று ஊழியர் சங்கத்தினர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு போதிய…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… Anti terrorism squad விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை இமெயில் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசின் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் . தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலக அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என…

Read More

விபத்து தடுக்க ‘ஹாட்ஸ் பாட்’ பகுதிகளில் பாதுகாப்பு திட்டங்கள்

தமிழகத்தில் ரோடு விபத்து நடக்கும் பிளாக் ஸ்பாட் பகுதிகளை கண்டறிந்து அங்கே விபத்து நடக்காமல் தடுக்கும் வகையிலான திட்ட பணிகள் நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது. மாநில அளவில் 1208 இடங்களில் அதிக விபத்து நடக்கும் பிளாக் ஸ்பாட் ஆக அடையாளம் காணப்பட்டது. இங்கே 865 இடங்களில் விபத்து நடப்பதை தடுக்கும் வகையிலான பணிகள் நடத்தப்பட்டது. வேகத்தடை அமைப்பு ரிப்ளக்டர், பாதசாரிகள் கடக்கும் பகுதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது. மேலும் விபத்து நடக்காத வகையில் ரோடு சீரமைப்பு பணிகளும்…

Read More

ஓட்டு எண்ணிக்கை நடத்துவது எப்படி? வரும் 29ம் தேதி அலுவலர்களுக்கு பயிற்சி…

கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,228 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில்…

Read More

கோவை மாவட்டத்தில் குத்தகைக்கு விட்டு மீட்கப்படாத அரசு நிலங்கள்…!

பொதுப்பணித்துறை நிலத்தில் குத்தகையில் இயங்கும் உக்கடம் பஸ் டிப்போ.. கோவை மாவட்டத்தில் அரசு நிலங்கள் தனியாருக்கு குத்தகை அடிப்படையில் கடந்த காலங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சில ஆண்டு கால அவகாசம் வழங்கியும், சில ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கியும் நிலங்கள் ஒப்படை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலங்களை மீட்க, அரசு பணிகளுக்கு பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படாமல் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் குத்தகைக்கு பல கோடி ரூபாய்…

Read More

அடையாளமின்றி அழிந்து போன நொய்யல் ஆறு…!

உக்கடம் ஆத்துப்பாலம் பகுதி நொய்யல் ஆறு… கோவை மாவட்டத்தில் துவங்கும் நொய்யல் ஆறு 180.50 கி.மீ தூரம் பாய்ந்து காவிரியில் கலக்கிறது. 28 குளங்கள், 23 அணைக்கட்டு, 2 நீர் தேக்கம், 18,386 ஏக்கர் பாசன பரப்புக்கு நேரடி நீர் சப்ளை மற்றும் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மறைமுக பாசன உதவிக்கு இந்த ஆறு உதவியாக இருக்கிறது. நகரில் உள்ள 8 குளங்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி இட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 200910…

Read More

கோவையில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் மற்றும் ஸ்கிராப் குடோன் உள்ளது . இன்று இரவு இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பிளாஸ்டிக் பாத்திரங்கள் பழைய இரும்பு மற்றும் தகர பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர் ….

Read More

கோவை சிறுமுகையில் ஊருக்குள் புகுந்த விளையாட்டு காட்டிய குட்டி யானை…!

கோவை சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் பகுதியில் இன்று காலை குட்டி யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பிறந்து சில மாதங்களே ஆன இந்த குட்டி யானை தாயை பிரிந்து வழி தெரியாமல் ஊருக்குள் வந்து விட்டதாக தெரிகிறது.ஊருக்குள் வந்த இந்த குட்டி ஜாலியாக ரோட்டில் சென்ற பொது மக்களிடம் விளையாடியபடி சுற்றிக் கொண்டிருந்தது . மேலும் வாகனங்களின் பின்னால் ஓடி சென்று விளையாட்டு காட்டியது. இதை பார்த்த பொதுமக்கள் குட்டியானையுடன் நின்று போட்டோ எடுத்து வீடியோ…

Read More

கோவை ஓட்டு எண்ணிக்கை மையம் செல்ல பாஸ்…

கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வரும் மே 4ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதில், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஒரு தொகுதிக்கு 120 பேர் வீதம் 10 சட்டமன்ற தொகுதிக்கு 1200 பேர் பணியில் இருப்பார்கள். இது தவிர போலீசார் 2 ஆயிரம் பேர் பணியில் இருப்பார்கள். மாவட்ட அளவில் தேர்தலில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14 முதல் 22 சுற்றுக்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுவதால், 14 முதல் 22 டேபிள்…

Read More