K. V

மண்டை மீது விழுமோ மரம், ஜி. எச் முன் மக்கள் அச்சம்

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரிய புங்கன் மரங்கள் இருக்கிறது குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு முன்பு இருந்த மரம் கீழே விழும் அபாயத்திலிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த மரத்தின் கிளைகள் சமீபத்தில் வெட்டி அகற்றப்பட்டது. இதேபோல் மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் புங்கன் மரம் இருக்கிறது. இந்த மரம் சாய்ந்து விழும் நிலையில் இருக்கிறது. மரத்தின் பாதி பகுதி காய்ந்து விட்டது. இது உடைந்து விழும் அபாயம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு கிளை விழுந்து விட்டது….

Read More

தங்கம், வெள்ளி கொள்ளை

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (38). இவரது பெற்றோர் கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே. நகரில் வசித்து வருகின்றனர். கடந்த ஜூலை 11 ம் தேதி, பாக்கியலட்சுமியின் பெற்றோர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். இதனால், வீட்டை பராமரிப்பதற்காகப் பாக்கியலட்சுமி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 28-ம் தேதி மதியம் வீட்டிற்குச் சென்று சுத்தம் செய்துவிட்டு வந்த பாக்கியலட்சுமி மீண்டும் ஜூலை 30-ம் தேதி காலை…

Read More

சிறார்களை பிச்சை எடுக்க வைத்த 2 பேர் கைது

கோவையில் சிறுவர்களை பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் சிலர் சிறுவர்களை வைத்து பிச்சை எடுக்க வைப்பதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சூர்யமணி (25) என்பவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் பேனா விற்பது போல நடித்து, பொதுமக்களிடம்…

Read More

கோவை வஉசி பூங்காவில் பாதுகாப்பின்றி தவிக்கும் பறவைகள்….

கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்கா 4.50 ஏக்கர் பரப்பில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. 160க்கும் மேற்பட்ட வகையான ஆயிரத்திற்கும் உயிரினங்கள் இங்கே இருந்தன. இந்த பூங்கா கடந்த ஆண்டு மூடப்பட்டது. இங்கே இருந்த உயிரினங்கள் வேறு பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மக்கள் முக்கிய பொழுது போக்கு பூங்கா மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். பூங்கா மூடினாலும் தற்போது மயில், கிளி, வாத்து, ஈமு கோழி மற்றும் ஆமை…

Read More

பிறப்பு சான்றிதழ் பெயர் சேர்க்க வாய்ப்பு…

பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.012000-க்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இல்லாமல் உள்ளவர்கள், தங்களின் பெயரைச் சேர்த்துக் கொள்வதற்கான இறுதித் தேதி 26.09.2026 ஆகும். 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர்…

Read More

நடிகர் ராம்சரண் டிஸ்சார்ஜ் கோவிலில் சுவாமி தரிசனம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் அதிரடி ஹீரோவுமான ராம்சரண் நடித்த பெத்தி என்ற சினிமா படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நடித்த போது ராம் சரணுக்கு இடது கை மணிக்கட்டில் தசை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது‌. இதைத் தொடர்ந்து ராம்சரண் கோவையில் உள்ள ஒரு எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கே இரண்டு நாள் சிகிச்சை பெற்றார் ஆபரேஷன் முடிந்த நிலையில் இன்று அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார் அவருடன் அவரது…

Read More

தென்மேற்கு பருவ மழை ஏமாற்றம் நொய்யல் ஆறு காய்கிறது

கோவை கோவையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது . சில இடங்களில் லேசாக தூறல் மழையாக பெய்து வந்த போதிலும் அது விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக நொய்யல் நீர் ஆதார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது .‌மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் மழை இல்லாததால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வருவது குறைந்துவிட்டது. சிறிதளவு தண்ணீர் செம்மேடு சித்திரை சாவடி வரை பாய்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் திதி மற்றும் சடங்கு…

Read More

பஸ்ஸில் டிக்கெட் வாங்கலையா … கண்டறிய போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு…

கோவை மண்டலத்தில் அரசு பஸ்கள் இயக்கம், பயணச்சீட்டு வழங்குவது உள்ளிட்டவற்றை முறையாக கண்காணிக்க வேண்டும் என கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் மண்டல அளவிலான பயணச்சீட்டு பரிசோதகர்கள், ஓட்டுநர் பயிற்றுநர்கள், போக்குவரத்து ஆய்வாளர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மேலாண் இயக்குனர் முகமது நாசர் தலைமை வகித்தார். இதில், கோவை, ஈரோடு,…

Read More

பெண் பயணி மயக்கம்: பஸ்சில் மருத்துவமனை அழைத்து வந்து காப்பாற்றிய டிரைவர்…

கோவை தனியார் பஸ்சில் மயக்கமடைந்த பெண் பயணியை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோபி செட்டிபாளையத்தில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்தது. இந்த பஸ்சை டிரைவர் லோகேஷ் ஓட்டினார். பஸ், பீளமேடு அருகே வந்த போது பஸ்சில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனை பார்த்த மற்ற பயணிகள் கண்டக்டர் பிரகாஷ் மற்றும் டிரைவர் லோகேஷ் ஆகியோரிடம் தெரிவித்தனர்….

Read More

நடிகர் ராம் சரணுக்கு கோவையில் ஆபரேஷன்

கோவை தனியார் மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர் பெத்தி என்ற திரைப்படத்தில் நடித்தார் அப்போது சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை…

Read More