K. V

பேரூர் நொய்யல் கரையில் ஆடிப்பெருக்கு…

. கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் பேரூர் முக்தி தரும் தலமாக கருதப்படுகிறது. இறந்த முன்னோர்களுக்கு இங்கே சடங்கு செய்து தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று பிறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுக்க அதிகளவு பொதுமக்கள் வந்திருந்தனர் அதேசமயம், இறந்து போன குழந்தைகள், திருமணம் ஆகாத பெண்கள், மற்றும் பெரியோர் ஆகியோருக்கு படையல் வைத்து…

Read More

டெங்கு கொசுக்களை அழிக்க 12 லட்சம் பொருட்களை அகற்ற கோவை மாநகராட்சி திட்டம்…

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சிகளில் உள்ள மத்திய கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய மண்டல பகுதிகளில் வார்டு, வாரியாக ஆய்வு செய்யப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. சில வீடுகள், குடோன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தேவையற்ற பொருட்களை குவித்து வைத்திருப்பதன் மூலமும், டயர், சிரட்டை ஆகியவற்றில் நீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் கோவை மாநகராட்சியில் வார்டு…

Read More

பெண் உள்ளாடைகளை திருடிய சைக்கோ கும்பல்…

கோவை, சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எஸ் நகரில் உள்ள குடியிருப்புகளில்,வீட்டின் வெளியே துவைத்து காயப் போடப்பட்டு இருந்த பெண்களின் உள்ளாடைகள் மற்றும் உடைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மாயமாகி வந்தன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து பெண்களின் ஆடைகள் மட்டும் காணாமல் போனதால், அப்பகுதி பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது, இந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தனர். அப்போது, இதுவரை…

Read More

17 வயது சிறுமிக்கு டார்ச்சர், 15 வயது சிறுவன் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது ‘சிங்கப்பெண்’ மூலம் இளம்பெண் புகார் அளித்தது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கோவை மாநகர போலீஸ் சார்பில் செயல்பட்டு வரும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அவசர உதவி எண் 1091 -யை தொடர்பு கொண்டு 19 வயது இளம்பெண் ஒருவர் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து ‘சிங்கப்பெண்’ போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், தான் 17 வயதாக இருந்த…

Read More

கள்ளக் காதலியை கொலை செய்த வாலிபர் தந்தையுடன் கைது…

பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோடங்கிபாளையம் செல்லும் சாலையில், ஒரு தோட்டத்து பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது. கிணத்துக்கடவு போலீசார் பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளியை தேடி வந்தனர். கொலை நடந்த சாலையில் இருந்து இரண்டு நபர்கள் பைக்கில் பொள்ளாச்சியை நோக்கி செல்லும் காட்சியும், ஒட்டி செல்பவரின் முகமும் பதிவாகியிருந்தது. இதை வைத்து விசாரித்த போது பழனி முத்து(35) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பழனிமுத்துவின் தந்தை குருநாதனின்…

Read More

உக்கடம் பெரியகுளம் கரை உடையும் அபாயம்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் கரும்புக்கடையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வகையில் 5 ஆண்டிற்கு முன் குளக்கரையில் ரோடு போட்டார்கள். ஏற்கனவே இந்த பகுதி வாக்கிங் தளமாக இருந்தது. இதில் இருந்த இன்டர்லாக் கற்களை அகற்றி பின்னர் தார் ரோடு போட்டார்கள். உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணியின் போது இந்த ரோடு தான் பிரதானமாக மாற்று பாதையாக பயன்படுத்தப்பட்டது. 1.6 கி.மீ தூரம் அமைந்த இந்த ரோடு தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. சில வாகனங்கள் இந்த வழியாக…

Read More

ஆத்துப்பாலம் மயானத்தில் மனித மண்டையோடு, எலும்புகளை தோண்டி வீசும் அவலம்…

கோவை ஆத்துப்பாலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் பரப்பிலான மயானம் உள்ளது. கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மயானம் பயன்பாட்டில் இருக்கிறது. பல ஆயிரம் சடங்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இட நெருக்கடியால் இங்கே சடலம் புதைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரிரு நபர்கள் சடலம் அடக்கம் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக இங்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமாதிகள் இருக்கிறது. அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சடங்கு செய்வதால் இவற்றை மாநகராட்சியினர் அகற்றவில்லை. மயானத்தில்…

Read More

சிறுவாணியில் மழை: நீர்மட்டம் உயர்வு

கோவை சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க பரப்பு 22.46 சதுர கிலோமீட்டர் . அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்ட தேக்க பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி, தற்போது 22 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் இன்னும் ஒரு மாதத்தில் அணையின் நிரம்ப வாய்ப்பு இருக்கிறது. தற்போது…

Read More

கோவையில் மக்கள் தொகை வீட்டு கணக்கெடுப்பு துவக்கம்

கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை வீட்டு கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. ஏற்கனவே இந்த கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக கடந்த மாதம் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் சுமார் 1.20 லட்சம் பேர் சென்சஸ் வெப்சைட்டில் தங்கள் வீடுகள் தொடர்பான சுய விவரங்களை பதிவு செய்தனர். https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் சுய தகவல்களை பூர்த்தி செய்தவர்களுக்கு 13 இலக்கு எண் கொண்ட மெசேஜ் வந்துள்ளது. இதில்…

Read More

கோவை ஜி. எச் எக்ஸ்ரே பிரிவு ஏக மோசம்

கோவை அரசு மருத்துவமனையின் எம்எம் பிளாக்கில் எக்ஸ்ரே பிரிவு உள்ளது.இந்த பகுதியில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இங்கே எக்ஸ்ரே பிலிம் மற்றும் ஆவணங்கள் பராமரிப்பு பகுதி பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியை புதுப்பித்து தர வேண்டும். பொதுமக்கள் நோயாளிகள் உட்காருவதற்கு போதுமான நாற்காலிகள் அமைக்கப்படவில்லை.மேலும் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சரில் அலைத்து சென்று வருவதற்கும் இந்த பகுதியில் இடையூறு இருக்கிறது.எனவே புதிய வார்டு அல்லது நோயாளிகள் தொந்தரவு இல்லாத பகுதியில் எக்ஸ்ரே…

Read More