K. V

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பிரியாணி புரோட்டா விலை உயர்வு..!

வணிக கேஸ் சிலிண்டர் அட்ரஸ் பற்றாக்குறை மாநில அளவில் அதிகரித்துள்ளது . கோவை மாவட்டத்தில் சிலிண்டர் கிடைப்பது அரிதாகிவிட்டது. இதனால் இருப்பில் உள்ள சிலிண்டர்களை வைத்து சமையல் செய்து உணவு பண்டங்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெரிய ஹோட்டல்களில் பிரதானமான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் செய்ய முடியாத சூழல் இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஹோட்டல்களில் சாப்பிட பொதுமக்கள் வழக்கம்போல் கூட்டமாக குவிந்து வருகிறார்கள். வணிக சிலிண்டர்…

Read More

கோவையில் கடந்த மாதம் 28 பேர் விபத்தில் சாவு

கோவை நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விபத்துகளில் 28 பேர் உயிரிழந்தனர். இதில் எட்டு பேர் லாரி மற்றும் பஸ்ஸில் மோதி இறந்துள்ளனர் . ஆறு பேர் கனரக வாகனங்களில் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். ரோட்டை கடக்க முயன்றவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிவேகமாக செல்பவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. விபத்து களை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கோவை நகரில் பழுதான ரோடுகள் தோண்டப்பட்ட குழிகள் மேம்பாலம் மற்றும் சாலை…

Read More

கோவையில் நடுரோட்டில் பற்றி எரிந்த கார்

கோவை சூலூர் முத்து கவுண்டன் புதூர் பகுதி ரயில்வே மேம்பாலம் வழியாக இரவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது பைக் மீது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பைக்கில் சென்ற வாலிபர், பைக்குடன் மேம்பாலத்திலிருந்து நிலை தடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மாதம்பட்டி…

Read More

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை; கோவை கலெக்டர் தகவல்

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது; கோவை மாவட்டத்தில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது இல்லை. ஏற்கனவே, சிபிசிஎல், ஐஓசிஎல் உள்ளிட்ட கேஸ் ஏஜென்சியுடன் கடந்த சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. சிலிண்டர் தட்டுப்பாடு இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம், மாநில அரசுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, வர்த்தக சிலிண்டருக்கு உடனடி தட்டுப்பாடு…

Read More

கோவையில் பிணங்களை எரிப்பதில் சிக்கல்..

லேகாவை மாவட்டததில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி மயானங்களில் சடலங்களை தகனம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விறகுகள் மூலம் சடலங்களை எரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சி பகுதியில் 11 மின் மயானங்களில் இறந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. மின்சாரம் மற்றும் எல்பிஜி கேஸ் மூலம் இயங்கும் இயற்கை எரிவாயு தகன மேடைகள் இருக்கின்றன. இதன்மூலமாக, இறந்தவர்களின் சடலங்கள் வழக்கமாக எரியூட்டப்பட்டு வருகின்றன. , தற்போது வர்த்தக சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்…

Read More

கோவையில் வாலிபரை மிரட்டி ஜி பே மூலமாக 43 ஆயிரம் பறிப்பு: 4 மாணவர் கைது

விருதுநகரை சேர்ந்தவர் முனிஸ்குமார் (26), இவர், கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். ஐடி நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த பணியில் இருந்து முனிஸ்குமார் விலகி வேறு வேலை தேடி வருகிறார். முனிஸ்குமார் சவுரிபாளையம் மற்றும் உடையம்பாளையம் பகுதியில் வேலை தேடி சென்றார். அப்போது உடையம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த தனக்கு தெரிந்த நபர் லோகேஷ் என்பவரது அறைக்கு சென்றார். அங்கு லோகேசின் நண்பர்கள் 3 பேர் இருந்தனர்….

Read More

பி எப் சந்தாதாரர்களுக்கு முக அடையாள தொழில்நுட்பம்(FAT) நடைமுறை..

மத்திய வருங்கால வைப்பு நிதிஆணையரும், தொழிலாளர வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கோவை மண்டலத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கோவைக்கு வருகை தந்தார். திருப்பூர் பிராந்திய அலுவலகத்தையும் பார்வையிட்டு சஹாயக் செயற்கை நுண்ணறிவு உதவி மையத்தை திறந்தார். இந்த பயணத்தின்போது கொடிசியா, கொசிமா, உபாசி, டீ, ஒசைரி உற்பத்தியாளர் சங்கம், சின்னவேடம்பட்டி தொழில் சங்கம் போன்றவற்றின் பிஎப் தொடர்பான பரிந்துரை, எதிர்பார்ப்பு அறிய சந்திப்பு நடத்தப்பட்டது. வேலை வாய்ப்பு உருவாக்கத்தை…

Read More

கோவை டிஜி காப் வாட்ஸ் அப் சாட் போட் அறிமுகம்.. !

கோவை மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ‘கோவை டிஜி காப்’ என்ற பெயரில் புதிய வாட்ஸ்ஆப் சாட் போட் சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சரவண சுந்தர், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் அறிமுகப்படுத்தி வைத்தனர். போலீசாரை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ் ஆப் சாட் போட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் 98400…

Read More

போத்தனூர் தான் பாத் வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி துவக்கினார்..!

கோவை மாவட்டத்தில் போத்தனூர்- தன்பாத் அம்ருத் பாரத் ரயில் சேவை இன்று மாலை துவங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி திருச்சியில் நடந்த விழாவில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்த ரயில் சேவையை துவக்கினார். போத்தனூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு மாலை 5.30 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது. போத்தனூர் தன்பாத் அம்ருத் பாரத் ரயில் (வண்டி எண்: 06619) வரும் 13ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தன்பாத் ரயில் நிலையத்தை சென்றடையும்….

Read More

காவி மயம் ஆகிறது போத்தனூர் ரயில் நிலையம்..!

கோவை மாவட்டத்தின் பாரம்பரிய மற்றும் பழமையான ரயில் நிலையமாக போத்தனூர் ரயில் நிலையம் உள்ளது. கோவை ரயில் நிலையம் துவங்கும் முன்பு போத்தனூர் ரயில் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. தற்போது போத்தனூரில் ரயில் நிலையத்தை 100 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் பிட் லைன் மற்றும் ரயில் பாதை விரிவாக்கம் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் மஞ்சள் கலந்த வெளிர் பச்சை நிற வண்ணம் பூசப்பட்டிருந்தது. இந்த…

Read More