K. V

தமிழ் புத்தாண்டு: மருதமலையில் பக்தர்கள் குவிந்தனர்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் மலை பாதையில் அனுமதிக்கப்படவில்லை. இருசக்கர வாகனங்களில் மட்டும் பக்தர்கள் மலை பாதை வழியாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட…

Read More

கோவையில் துணை தலைமை தேர்தல் கமிஷனர் ஓட்டு பதிவு தொடர்பாக ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையர் பானு பிரகாஷ் யத்ரு, தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திருப்பூர், ஈரோடு ,நீலகிரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் வரும் 23ஆம்…

Read More

கோவையில் வீடுகளுக்கு பாம்பு வருவதாக தீயணைப்பு துறைக்கு1368 புகார்…!

கோவை மாவட்டத்தில் தீயணைப்புத்துறையில் கோவை தெற்கு, கோவை வடக்கு, பீளமேடு, கணபதி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என 14 பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலமாக இருப்பதால் தீ விபத்துகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் தினமும் வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் பாம்பு தொந்தரவு தொடர்பாக 1368 அழைப்புகள் பெறப்பட்டது. வெயில் காரணமாக பொந்துகளில் இருந்து வெளியே வருவதாகவும் குடியிருப்புகளில் நுழைந்து விடுவதாலும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர்…

Read More

ஜனநாயகன் திரைப்படத்தை கோவையில் சேனலில் ஒளிபரப்பியவர் கைது…!

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (44 ). இவர் உள்ளூரில் ராசி பிரைம் மூவி என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். இதில் கடந்த 11ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தார் .இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக கோவை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மோகனப்பிரியா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். மத்திய தணிக்கை துறை ஆய்வில் ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தை…

Read More

செந்தில் பாலாஜி பட்டி பிளான்… அம்மன் அர்ஜுனன் புகார்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் கோவை தெற்கு சட்டமன்ற அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இன்று மாலை புகார் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது நான் 50 ஆண்டுகளுக்கு முன்பே கோவைக்கு வந்து விட்டேன். பிழைப்பு தேடி கோவை வந்தேன். எனக்கும் கோவை மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு அன்பு உண்டு. ஆனால் செந்தில் பாலாஜி அப்படியல்ல. தேர்தலுக்காக ஓட்டுக்காக கோவை வந்திருக்கிறார். அவர் தப்பு கரூரில் வேகாது. எனவே அவர் கோவை வந்து…

Read More

அமைதியாக தேர்தல் நடத்த கொடி அணி வகுப்பு…

கோவை மதுக்கரை மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் கோவை மாவட்ட போலீசார் வரும் சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். இதில் கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் 462 போலீசார் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் அமைதியாக மக்கள் எந்தவித அச்சுறுத்தல் மிரட்டல் இன்றி தைரியமாக ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பான முறையில் ஓட்டு போடும் வகையில் போலீசார் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது….

Read More

கோவை காந்திபுரத்தில் கரூர் குரூப் டோக்கன்…

கோவை காந்திபுரத்தில் ஒட்டுக்கு பரிசு தருவதற்காக டோக்கன் வழங்கப்படுவதாக இன்று இரவு புகார் வந்தது. தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் அங்கே சென்று விசாரித்தனர். சிலரிடம் இருந்து டோக்கன் பெறப்பட்டது. டோக்கன் வீடு வீடாக சிலர் வழங்குவதாகவும் பணம், பரிசு பொருட்கள் விரைவில் தருவதாக கூறியிருப்பதாகவும் தகவல் வெளியானது. டோக்கனில் என்ன பரிசு தருவார்கள் என தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வாக்காளர்கள் மத்தியில் பரிசு பொருட்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சில வீடுகளில் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்….

Read More

திமுகவிற்கு வெளிப்படையாக தபால் ஓட்டு: கோவை தெற்கு தொகுதியில் விதிமுறை மீறல்…!?

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் வரும் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. தற்போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போடலாம். இதற்கான படிவம் பூர்த்தி செய்தவர்களுக்கு வீடு வீடாக சென்று தபால் ஓட்டு வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் 180 குழுக்கள் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் கொடுத்தவர்களின் வீடு தேடி சென்று தபால் ஓட்டு சீட்டுக்களை பெற்றனர். ஒட்டு போட்ட பின்னர் அந்த…

Read More

பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகை…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகிறார். கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பீளமேடு கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. பொதுக் கூட்டத்தில் கோவை மற்றும் அவிநாசி தொகுதியை சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் 9 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பேச உள்ளார்….

Read More

கோவை டாஸ்மாக் பாரில் ஊழியர் அடித்து கொலை: 2 பேர் கைது…!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (60). இவர் கோவை வெரட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்தார். இன்று மதியம் அவர் கடையில் பணியில் இருந்தார் . அப்போது கோவை இடையர் வீதி பகுதியை சேர்ந்த காய்கறி கடை வியாபாரி பிரபு (28) மற்றும் தெலுங்கு வீதியை சேர்ந்த மனோஜ் (27) ஆகியோர் மது குடிக்க வந்தனர். நெருங்கிய நண்பர்கள் ஆன இவர்கள் அடிக்கடி இங்கே மது குடப்பதாக…

Read More