மோசடி நபரை போலீசார் விசாரிக்கலை… ஆதிவாசி பெண்கள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் காரமடை கோபநாரி தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண்கள் முற்றுகையிட்டு குவிந்தனர். அப்போது அவர்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எங்களிடம் நட்பாக பழகினார். அவர் எங்களிடம் தனித்தனியாக பணம் நகை வாங்கினார். சில நாட்களில் திருப்பி தருவதாக கூறி அவர் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என பலரிடம் பணம், நகை வாங்கினார்….

Read More

போலீஸ் வாங்கிய லஞ்ச பணத்தை தர சொல்லுங்க… கோவையில் விவசாயிகள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த வாரம் கோவில்பாளையம் பகுதி விவசாய தோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை செய்தார்கள். நீரா பானம், கள் விற்பனை செய்தால் அதற்கு லஞ்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் கேஸ் போடுவோம் என மிரட்டியுள்ளார்கள். நேரடியாக தோட்டங்களுக்கு சென்று மாமூல் கேட்கிறார்கள். 4…

Read More

தெரு நாய் தொல்லை… வண்டியோடு சுத்தும் கோவை மாநகராட்சி…

கோவை மாநகர பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை, சிங்காநல்லூர், குனியமுத்தூர்,ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணிக்கு செல்வோரை நாய்கள் கூட்டமாக துரத்துவது வாடிக்கையாக உள்ளது. மாநகரில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டது. ஒரே மாதத்தில் 500க்கும் மேற்பட்ட நாய்கள்…

Read More

குளத்தில் ஆபத்தான முறையில் போட்டோ எடுக்கும் வாலிபர்கள்…

கோவை தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ண குளம் கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டது. நடைபாதை, பூங்கா, செல்பி பாயிண்ட், விளையாட்டு கூடம் போன்றவை அமைக்கப்பட்டது. குளத்தின் மீது நின்று போட்டோ எடுக்கும் வகையில் |மிதவை பாலம் பகுதியும் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியில் உயரமான இரும்பு தடுப்பு அமைக்காமல் விட்டதால் வாலிபர்கள் சிலர் அதன் மீது ஏறி நின்று ஆபத்தான வகையில் செல்போனில் போட்டோ எடுக்கிறார்கள். சிலர் கம்பி மீது ஏறி…

Read More

குவிந்து கிடக்கும் அஸ்தி, சடங்கு கலயங்கள்…!

கோவை சொக்கம்புதூர் பகுதியில் மாநகராட்சியின் மின் மயானம் உள்ளது. இந்த மயானம் வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் பழுதடைந்து இடிந்து விழுந்து விட்டது. இந்த பகுதியில் பாதையை ஒட்டி ஏராளமான அஸ்தி பானைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத அஸ்தி கலயங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளது. குப்பை குவியல்களுக்கு இடையே காணப்படும் இந்த கலயங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அஸ்தி கலயங்களை வாங்கிச் செல்லாமல் விட்டுவிட்டதாலும், ஏற்கனவே பயன்படுத்திய அஸ்தி…

Read More

கோவையில் குவியும் வெளி மாநில குற்றவாளிகள்…!

கோவை மண்டலத்தில் வெளிமாநில குற்றவாளிகள் பதுங்குவதை கண்டறியும் திட்டங்கள் முடங்கி போனது. விசாரணை நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்வதற்காக வெளி மாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாகி விட்டது. திருப்பூர் பனியன், விசைத்தறி நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களும், கோவை லேத் ஒர்க்ஷாப், பவுண்டரி, பம்பு, ஆட்டோ மொபைல், நகை பட்டறைகளில் 3 லட்ச வெளியூர்வாசிகளும், ஈரோட்டில் பெட்சீட், நெசவு தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும்…

Read More

கோவை போலீசார் மீது கேரளா போலீசார் வழக்கு…?!

கேரள மாநிலம் ஆனைகட்டி அருகே உள்ள அட்டப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (52). இவரிடம் நேற்று இரவு கோவை தடாகம் போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அப்போது அவரிடம் முரட்டுத்தனமாக போலீசார் நடந்து கொண்டதாகவும் அவரது விலா எலும்பில் தாக்கியதாகவும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. கடும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட முருகேஷ் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோட்டத்துறா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் போலீசாரின் தாக்குதல் தொடர்பாக…

Read More

பாட்டில் சப்ளையர்களை மடக்குவார்களா மதுவிலக்கு போலீசார்…

கோவை நகர், புறநகரில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மது பாட்டில் கடத்தல், மது பாட்டில்களை முறைகேடாக விற்பனை செய்தல், கள் விற்பனை தொடர்பாக விசாரித்து வழக்கு பதிவு செய்ய அதிகாரம் இருந்தது. மதுபானம் தொடர்பான வழக்குகளில் மட்டுமே வழக்கு போட, விசாரிக்க இந்த பிரிவினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மது விலக்கு போலீசார் மதுபானம் தொடர்பாக விசாரிக்கும் போது கஞ்சா, போதை மாத்திரை, போதை மருந்துகள் தொடர்பான தகவல்களும் கிடைப்பதாக தெரியவந்தது. ஆனால் இது தொடர்பாக…

Read More

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ராம்சரண் ஆபரேஷனுக்காக கோவை வருகை…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர் மகன் நடிகர் ராம்சரண் ஆகியோர் இன்று தங்களது குடும்பத்தினருடன் கோவை வந்தனர். ராம்சரண் கை மணிக்கட்டு பகுதியில் ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை இருப்பதாக தெரிகிறது. இதற்காக அவர் தந்தை மற்றும் குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில் அவர் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நாளை காலை அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. அவருக்கு ஓரிரு நாள் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும்…

Read More

கோனியம்மன் கோயில் உண்டியல் கொள்ளை: 8 பேர் சஸ்பெண்ட்

காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது திருவிழா காலங்களில் பயன்படுத்தும் ஆறு உண்டியலில் ஒரு உண்டியலை காணவில்லை. அதை கோயில் ஊழியர்கள் ரகசியமாக கோயிலுக்கு பின்புறம் எடுத்துச் சென்று திறந்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விட்டதாக பக்தர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் விசாரணை…

Read More