கோவை நகரில் சைபர் மோசடி கும்பலால் 2294 பேர் பாதிப்பு…

கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளின் கைவரிசையால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் பணத்தை இழக்காமல் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் சைபர் கிரைம் மோசடி தொடர்ந்து அதிகமாகி வருகிறது. கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.27 கோடியை மக்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை சைபர் மோசடி கும்பலிடம் 15…

Read More

கோவையில் தந்தை இறந்தது தெரியாமல் நாள் முழுவதும் தேடிய மகள்…!

கோவை மதுக்கரை சீரபாளையம் அர்ஜூன் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து (53). இவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13ம் தேதி காளிமுத்து மனைவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை காளிமுத்து மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வந்தனர். கடந்த 18ம் தேதி காளிமுத்து மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்….

Read More

கோவையில் பிளாட்பாரத்தில் தூங்கியவர் கல்லால் தாக்கி கொலை…!

. கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (56). எலக்ட்ரீசியன். இவர் மனைவி இந்திராணி (50). தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு மணிகண்டன் (30) மற்றும் பரமேஸ்வரன் (27) என்ற மகன்கள் உள்ளனர். மணிகண்டன் டிரைவராக பணிபுரிந்து சுந்தராபுரத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். பரமேஸ்வரன் தாயாருடன் வசித்து வருகிறார். ரங்கநாதன் மது குடித்து வந்ததாகவும், குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக…

Read More

கோவை மாவட்டத்தில் இன்று 19115 ஓட்டு மெஷின்கள் தொகுதி வாரியாக தேர்வு

கோவை மாவட்டத்தில் 10 சட்ட மன்ற தொகுதிகளில் 3571 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இவற்றில் 8,343 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 5200 கட்டுப்பாட்டு மெசின்கள் (கன்ட்ரோல் யூனிட்), 55/2 சின்னம் காட்டும் மெசின்கள் (விவி பேட்) என மொத்தம் 19,115 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த மெசின்கள், தெற்கு தாலூகா அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் பாதுகாப்பு குடோனில் இருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து ஒப்படைக்கப்படும். அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான தாலூகா அலுவலகத்தில்…

Read More

தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு அலுவலர்கள், சிபாரி செய்யும் உயர் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஓட்டு சாவடிக்கு 5 பேர் பணியாற்ற வேண்டும். மாவட்ட அளவில் ஓட்டு சாவடிகளில் மட்டும் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இது தவிர தேர்தல் பணியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணி அலுவலர்களுக்கு பணி உத்தரவு விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அலுவலர் சிலர்…

Read More

கோவையில் வாக்காளர்களுக்காக பதுக்கிய 173 அண்டா பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை கண்டறிய சோதனை நடத்தி வருகிறார்கள் இன்று உக்கடம் புல்லு காடு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பாத்திரங்களை பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் வீட்டில் 173 சில்வர் அண்டா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாத்திரங்களை தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த…

Read More

கோவையில் தேர்தல் சோதனை: ரூ 2.76 கோடி நகை பணம் பொருட்கள் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்று வரை 2.76 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் நகை மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 528 லிட்டர் அளவிலான மது, 129 கிலோ எடையிலான போதை பொருட்கள் 32 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் பணம் மற்றும் பொருட்கள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. ஆர்…

Read More

தமிழக குடிநீர் வாரியத்தில் பல கோடி ரூபாய் திட்டப்பணி ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்…!

தமிழக மேற்கு மண்டல மாவட்டங்களில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாவட்டங்களுக்கான குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டாக போலியான நிதி மூலதனம் ( பைனான்சியல் டர்ன் ஓவர்), பணி அனுபவ கால சான்றுகளை சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை செய்து வருவதாக…

Read More

கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 110 புகார்கள் குவிந்தது…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு 10 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்கும் பணி கடந்த 16ம் தேதியில் இருந்து நடக்கிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண். 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி…

Read More

கோவை ஜிசிடி ஓட்டு எண்ணிக்கை மையம் தயாராகிறது…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஒட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது . இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஒட்டு எண்ணிக்கை…

Read More