கோவையில் ஓட்டு சாவடிகளில் சாமியானா, மருத்துவ குழு…

ஓட்டு சாவடி பைல் படம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் தயார் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன்குமார், தேர்தல் பிரிவு அதிகாரிகள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஓட்டு சாவடிகளை நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும். குடிநீர், கழிவறை, மின் விளக்கு, சாய்வு தளம் போன்றவை முறையாக…

Read More

கோவையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அதிரடி டெஸ்ட்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதிகளில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. இதற்கு துணை கலெக்டர் அந்தஸ்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஆர்ஓ), தாசில்தார் அந்தஸ்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஏஆர்ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட அளவில் 30 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் இவர்களிடம் தான் வேட்பாளர்கள் வேட்பு மனு…

Read More

கோவையில் தேர்தல் சோதனை: 10 நாளில் 4.51 கோடி ரூபாய் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 31.97 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை தெற்கு தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்த போது பில் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 16 டேபிள் பேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்…

Read More

ஓட்டு மெஷின்களை பத்திரமா கொண்டு போகணும்.. கோவையில் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு

கோவை ஆர்.எஸ் புரம் மாநகராட்சி கலை அரங்கத்தில் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் 366 மண்டல தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். பயிற்சியின் போது அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் 10 முதல் 15 ஓட்டு சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது….

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு சாவடிகளுக்கு வீல் சேர் ரெடி. ..

கோவை மாவட்டத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்.கவுண்டம்பாளையம்,சூலூர் உள்பட மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. இதில் 3,563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. = மாவட்டத்தில் மொத்தம் 1,062 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விருப்பம் இருந்தால் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்காளிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தப்படியே தபால் ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு நேரில் வரும் முதியவர்கள், வயதானவர்கள் நடக்க முடியாதவர்கள்,…

Read More

நாளை வரை வாக்காளர்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும்,…

Read More

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேர் பழுது: தேரோட்டம் நடத்துவதில் சிக்கல்…!

தமிழகத்தின் காசி என்ற பெருமையைக் கொண்டது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். பிறவா பனை இரவா புளி, எலும்பு கல்லாவது, புழுக்காத சாணம், வலது காது மேல்நோக்கி இருப்பதுபோன்ற ஐந்து அதிசயங்கள் கொண்டது இந்த கோவில். இந்தக் கோயிலில் வழிபாடு செய்பவர்கள் பிறவி பயன் பெறுவார்கள் என்று ஐதீகம் உண்டு.இறந்தோருக்கு சடங்கு செய்ய பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கே வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்….

Read More

தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ் பி வேலுமணி போட்டி…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 23 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலை அஷ்டமி துவங்கும் நிலையில் முன்கூட்டியே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி யார் போட்டியிடுகிறார். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வழக்கம்போல் மண்ணின் மைந்தனான எஸ் பி வேலுமணி போட்டியிடப் போகிறார் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த முதல்…

Read More

கோவை மாவட்டத்தில் ‘ஆதிதிராவிடர் காலனி’ என ரசீது வழங்கிய அதிகாரிக்கு நோட்டீஸ்…!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட வடவள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி என்று குடிநீர் கட்டண ரசீது வழங்கியுள்ளது . வடவள்ளி செயல் அலுவலர் குடிநீர் கட்டணம் செலுத்திய பொதுமக்களுக்கு 23.03.2026 தேதியில் ரசீது வழங்கியுள்ளார். அதில் வேலப்பநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி என்று குறிப்பிட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் வரப்பெற்ற தகவலின் பேரில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல ஆணையம் தாமே முன் வந்து இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அரசாணை (நிலை)…

Read More

கோவையில் 20 கிலோ தங்க கட்டியை தடையின்றி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அதனை சோதனை செய்து பார்த்தபோது தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் சந்தேகம் இருப்பதாக…

Read More