தென்மேற்கு பருவ மழை ஏமாற்றம் நொய்யல் ஆறு காய்கிறது
கோவை கோவையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறது . சில இடங்களில் லேசாக தூறல் மழையாக பெய்து வந்த போதிலும் அது விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை. குறிப்பாக நொய்யல் நீர் ஆதார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது .மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் மழை இல்லாததால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வருவது குறைந்துவிட்டது. சிறிதளவு தண்ணீர் செம்மேடு சித்திரை சாவடி வரை பாய்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் திதி மற்றும் சடங்கு…
