கோவையில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு…

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் ஓட்டு போடுவதை வலியுறுத்தும் வகையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ரங்கோலி மூலமாக தேர்தல் விழிப்புணர்வு பணி இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்தியா மேப் வடிவத்தில் வாக்காளர்கள் நின்று கட்டாயம்…

Read More

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே இட ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற , தொடர்ந்து மக்கள் பணியில் தீவிரம் காட்டி வரும் அதிமுக பிரமுகர்களை களம் இருக்க தலைமை முடிவு செய்துள்ளது. கோவை வடக்கு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் பலர் சீட் விண்ணப்பம் வழங்கியிருந்தனர்.இதில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ‘இன்ஜினியர் சந்திரசேகர்’ தேர்வு பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் புகார்களை பதிவு செய்ய வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு குழுக்கள் என்ற விகிதத்தில் இந்த வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அலுவலரும் ஒரு வீடியோ கிராபரும் இருப்பார். இந்த குழுவினர் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பிரச்சார மேடை தெருமுனைப் பிரச்சாரம் உள்பட அனைத்து விதமான பிரச்சாரங்களையும் அங்கே நடக்கும் உரையாடல்களையும் வீடியோ பதிவு செய்வார்கள். தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் பதிவு செய்யவார்கள்….

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் ஊர்வலம் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு…

கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுபாடுகள், விதிமுறைகள் வழங்கி தேர்தல் பிரிவினர் உத்தரவு வழங்கியுள்ளனர் இதில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்கள் கூட்டுறவுத்துறை இடங்கள் போன்றவற்றில் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தக்கூடாது. கல்வித்துறை அலுவலகங்கள், மைதானங்கள், நிறுவனங்கள் எதிலும் அரசியல் நடவடிக்கை ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. உள்ளூர் சட்டத்தை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் வேட்பாளர்களும் செய்யக்கூடாது. அப்படி அவர்கள் விளம்பரம் செய்திருந்தால் அவற்றை அகற்ற…

Read More

கோவை மாவட்டத்தில் கிராமங்களில் தேர்தல் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி…

கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. போஸ்டர் பேனர், கொடி மற்றும் கட் அவுட் வைப்பது தொடர்பாகவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சி வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் தொண்டர்கள் சொந்த செலவில் சொந்த சொத்துகளின் மீது எந்த நபருக்கும் இடையூறு இல்லாத வகையில் பேனர்கள், கொடிகள், கட் அவுட்டுகள் வைக்கலாம். ஆனால் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் இதுபோன்று விளம்பரம் செய்திட அனுமதி கிடையாது கிராம…

Read More

கோவையில் 5 பேரிடம் 72,000 ரூபாய் பறிமுதல்… தப்பு கணக்கு போட்டதாக தேர்தல் பிரிவில் புகார்..

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 37.46 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 13 கிலோ போதை பொருட்கள் சிக்கியது. நிலையான கண்காணிப்பு படையினர் 18.65 லட்ச ரூபாய் பறக்கும் படையினர் 12.08 லட்ச ரூபாய் மதிப்பிலான தொகையை பறிமுதல் செய்துள்ளனர்….

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்கள் இன்று சப்ளை…!

கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் 3563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இவற்றில் 8,391 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 5245 கட்டுப்பாட்டு மெசின்கள் (கன்ட்ரோல் யூனிட்), 5885 சின்னம் காட்டும் மெசின்கள் (விவி பேட்) என மொத்தம் 19,521 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. 20 சதவீதம் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டில் வைக்கப்படும். 20 சதவீதம் கூடுதல் மெசின்கள் இருப்பு நிலையில் வைக்கப்படும். மெசின்களில் பழுது ஏற்பட்டால் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த மெசின்களை ஆன்லைன் மூலமாக சமநிலைப்படுத்தி…

Read More

கோவை ஜிசிடி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

கோவை, மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை நடத்த…

Read More

இந்த தடவை கோவை தொகுதிகள் மிஸ் ஆக கூடாது… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!

கோவை முதலிபாளையம் பகுதியில கோவை, நீலகிரி திமுக நகர ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூடடம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது மேற்கு மண்டலத்தில் உள்ள 30 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; கோவையில் கடந்த ஒரு மாதம் முன்பு நடந்த இளைஞரணி கூட்டம் மாநாடு போல் நடந்தது. இதையடுத்து தற்போது…

Read More

கோவையில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணி தாமதம்…

கோவை மாவட்டத்தில் மேட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு, சூலூர், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்ட மன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் தற்போது 446 ஓட்டு சாவடிகள், 8 துணை ஓட்டு சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளுக்கு மேப் உள்ளிட்ட தகவல் விவரங்களுடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஓட்டு சாவடிகளில் குடிநீர், கழிவறை, சாய்வு தளம், நிழற்கூரை உள்ளிட்ட வசதிகளை…

Read More