கோவை ஜி ஹெச் : வெளி நோயாளிகள் பிரிவுகள் மூடல்…

கோவை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு கடந்த 1974ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த பிரிவில் காலை முதல் மதியம் வரை அதிக கூட்டம் காணப்படுகிறது. பழைய கட்டடத்தில் 2 தளங்களில் இந்த பிரிவு செயல்படுகிறது. தரை தளத்தில் ஆண்,பெண் மருத்துவ பிரிவு, கட்டு கட்டுதல், ஊசி போடுதல் பிரிவு, முதல் தளத்தில் காது மூக்கு தொண்டை பிரிவு, குழந்தைகள் அறுவை அரங்கம், நரம்பியல் பிரிவு, இரண்டாவது தளத்தில் பால்வினை நோய் பிரிவு, தோல் மருத்துவம், நரம்பு, மன…

Read More

கோவையில் உடைந்து சாயும் மின் கம்பங்கள்

கோவை மாவட்டத்தில் வீடு, விவசாயம், வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு பிரிவினருக்கான மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது, மாவட்ட அளவில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. மின்கம்பங்கள் பற்றாக்குறை காரணமாக மின் இணைப்புகள் வழங்கும் பணி தாமதமாகி வருவதாக தெரிகிறது. குறிப்பாக புதிதாக உருவாக்கப்படும் லே அவுட்கள், கிராம பகுதியில் தொலைதூரத்தில் உள்ள வீடுகள், விவசாய தோட்டங்கள், வணிக…

Read More

திமுக திட்டங்களை காப்பியடிக்கிறதா தவெக…

திமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை தமிழக வெற்றி கழகம் அப்படியே காப்பியடித்து பெயரை மாற்றி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. பழைய திட்டத்தை அதே பெயரில் அப்படியே செயல்படுத்தினால் தங்களுக்கு எந்த பெயரும் கிடைக்காது என தமிழக வெற்றி கழகத்தினர் பெயரை மாற்றி பழைய திட்டங்களை காப்பியடிக்கும் முயற்சியை தொடர்ந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 2 மாதம் முன் நடந்த ஜமாபந்தியில்…

Read More

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடை

கோவையில் கட்டமைப்பை காரணம் காட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்தை தவெக அரசு முடக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. கோவை சிங்காநல்லூர் திறந்தவெளி சிறை வளாகத்தில் 20.18 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் திட்ட பணிகளை துவங்கவில்லை. மைதான பணிகள் நடத்த தயாராக இருந்த…

Read More

பிரிட்டிஷார் கொண்டாடிய வெரைட்டி ஹால் ரோடு…

கோவை போத்தனூரில் ஆங்கிலேயர் காலனி இருந்தது. அங்கே 400க்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தினமும் இரவில் ஆங்கிலேயர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஜாலியாக பொழுது போக்குவார்கள். அவர்களின் இரவு ஆட்டத்திற்கு கோவையில் எங்கேயும் கேளிக்கை விடுதி கிடையாது. அப்போது கோவையில் பிரபலமாக இருந்த வின்சென்ட் சாமிக்கண்ணு (இவர் பெயரில் உக்கடத்தில் ரோடு உள்ளது) ஒரு கேளிக்கை விடுதி கட்டினார். அந்த விடுதியில் நடனம், நாட்டியம், நாடகம் நடக்கும். சினிமா பார்க்க ஆங்கிலேயர்கள் விரும்பினால் பெரிய திரை…

Read More

சோகத்தையும் பாரத்தையும் ஏற்ற சுமைதாங்கிகள்…

பெருவழிகளில் வணிகர் தங்கி செல்ல தாவளம் என அழைக்கப்படும் தங்கும் சாவடி உருவாக்கப்பட்டது. பொது இடத்தில் பொது ஜனங்கள் இந்த இலவச தங்கும் கூடம் ஏற்படுத்தப்பட்டது. சாவடிகள் 5 மைல், 10 மைல் தொலைவுகளில் அமைந்திருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் பயணம் கால்நடையாகவே அமைந்தது. பாலக்காடு கணவாய் வழியாக மூன்று பண்டைய பெருவழிகள் கிழக்கு வழியாக உருவாக்கப்பட்டன. ஆனைமலை வடபூதி நத்தம், சி.கலையமுத்தூர், பழனி, திண்டுக்கல், மதுரை, திருத்தங்கல் வழியாக அழகன்குளம் செல்லும் வகையில்…

Read More

வன பொக்கிஷங்கள் நிறைந்த காஸ் பாரஸ்ட் மியூசியம்…

கோவை வனக்கல்லூரி வளாகத்திற்குள் 120 ஆண்டு கால பெருமை மிக்க காஸ் பாரஸ்ட் மியூசியம் உள்ளது. மத்திய வனத்துறைக்கு சொந்தமான இந்த மியூசியம் கடந்த 1906ம் ஆண்டில் எச்.காஸ் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதில் 100 ஆண்டுகளுக்கு முன் இறந்த யானை, காட்டெருமையின் எலும்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த கால ஆதிவாசிகள் பயன்படுத்திய கூராங்கல் கத்தி, மான், முயல், கேழை ஆடுகளை வேட்டையாட பயன்படுத்திய ஈட்டி, தேக்கு இழை ஆடை மண் சொப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில்…

Read More

நூற்றாண்டை கடந்த கோவை வனக்கல்லூரி…

கோவை மேட்டுப்பாளையம் ரோடு மேம்பாலம் அருகே கடந்த 1912ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஆங்கிலேயர்களால் ‘மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜ்’ துவக்கப்பட்டது. கோவை சர்க்கிள் வன பாதுகாவலராக பணியாற்றிய சி.ஐ.எப் லாட்ஜ் என்பவர் இந்த கல்லூரியை துவக்கினார். 195 ஏக்கரில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வனக்கல்லூரி துவங்கியது. தற்போது இங்கே பல ஆயிரம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜ் கடந்த 1955ம் ஆண்டில் தென்னக வனசரகர் கல்லூரியாக மாறியது. தமிழகம், கேரளா,…

Read More

கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள்…

கற்கால மனிதர்களின் ஆயுதம் கற்கள் என்பது அனைவரும் அறிந்தது தான் .ஆனால் அந்த கற்களின் வகைகள் ஆயுதம் தயாரித்த விதம் பலருக்கு தெரியாது. பழைய கற்காலத்தின் இறுதியில் அகேட் சால்சிடோனி செர்ட் கார்னீலியன் ஜழஸ்பர் ஆப்சீடியன் குவார்ட்ஸ் கற்கள் தான் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. இந்த கற்கள் கைப்பிடியுடன் அமைந்திருந்தன. சில கற்களை கொடுவாளாகவும் கத்தியாகவும். குத்தீட்டியாகவும் பயன்படுத்தினர். கற்கால கருவிகள் பிளேட் ப்யூரின் லூனேட் முக்கோணத்தில் இருந்தன. இந்த கருவிகள் கி மு 10 ஆயிரம்…

Read More

ஆயிரம் ஆண்டுகள் கடந்த புதை உயிரி எலும்பு படிமங்கள்…

மரணத்திற்கு பின் மனித உடல் நிலம், நீர், நெருப்பில் அழிந்து போய் விடும் இறப்பிற்கு பின் மனித உடலை அழியாமல் பாதுகாக்க ஆதிகால மக்கள் ஆர்வம் காட்டினர். இதற்காக தாழி, ஈம பேழைகள் உருவாக்கப்பட்டன .இதிலும் 200 முதல் 300 ஆண்டுகள் வரை மட்டுமே மனித எலும்புகளை பாதுகாக்க முடிந்தது. ஆனால் அரிதாக அபூர்வமாக பாறைகளில் சிக்கிய ரசாயன மாற்றத்தால் பாதிக்கப்படாத சில மனித எலும்புகள் புதை உயிரி எலும்பு படிமங்களாக பாசிலைஸ்டு போன் பிரக்மெண்ட் ஆக…

Read More